நடு வீட்டுக்கோலம்/Naduveettu Kolam

செட்டிநாட்டு பாரம்பரிய நடு வீட்டுக்கோலம் :
நகரத்தார்கள் வாழும் பல்வேறு ஊர்களை உள்ளடக்கிய செட்டிநாடு பகுதி, பாரம்பரியம் மிக்க, உயர்ந்த கலாச்சாரம் நிறைந்த இடமாக உலகளவில் பேசப்படும் சிறப்பு பெற்றது. முற்காலத்திலிருந்தே, கலை நுணுக்கம், சுவையான உணவு பழக்கவழக்கங்கள், எந்த மாதிரியான சூழ்நிலையிலும் சிக்கனம், சாமர்த்தியம், கட்டுப்பாடு என பலதிறன்களை உள்ளடக்கி வாழ்ந்து வந்தனர். உயர்ந்த அர்த்தங்களோடு முன்னோர்கள் வழி வந்த சில வாழ்க்கை முறையே அதற்கு இன்றும் அடையாளமாக உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில், இந்த நடு வீட்டுக்கோலம் மிகுந்த அர்த்தங்கள் கொண்டது என்பதை உணரும் போது ஆச்சரியம் நிறைந்த ஒன்றாக உள்ளது. இறையருளோடு வளமான வாழ்க்கை வாழவும், செல்வச் செழிப்பு, குடும்பப் பிணைப்பு, ஒற்றுமை என ஒவ்வொரு அவையங்களையும் கருத்தில் கொண்டு முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டதை இந்த கோலத்தின் மூலம் நாம் காணலாம்.

குடும்பம் (வீடு) இப்படியாக இருக்க வேண்டும் என்பதை கோலத்தில் உள்ளடங்கிய அர்த்தங்களோடு படைத்திட்டனர்.

அனுபவம் மிகுந்த சில ஆச்சிமார்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளோம்

நடு வீட்டுக்கோலத்தில் உள்ளடங்கிய கருத்துக்கள்:

வடிவம்: சதுரம் – உயர்வு, தாழ்வு, ஏற்ற இறக்கம் என எந்த கருத்து வேறுபாடும் இல்லாத சம வடிவம் சதுரம் என்பதால் குடும்பத்தில் வேறுபாடு இல்லாத ஒரு நிலை வளர வேண்டி இந்த வடிவத்தில் கோலம் அமைக்கப்பட்டுள்ளது.

நிறம்: வெள்ளை– வெள்ளை நிறமானது பெரும்பாலும் முழுமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது.
தூய்மை மற்றும் தியாகத்தின் சின்னம் என்பதால், குடும்பத்தில் உள்ளோர் இப்படிப்பட்ட நல்ல குணங்களுடன் விட்டுக்கொடுத்து தூயமனத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டி அமைக்கப்பட்டது,

கோலம் போடும் மாவு: பயன்படுத்தப்படும் பொருள் பச்சரிசி
பச்சரிசியை சுத்தமாக அலசி ஊறவைத்து, நல்ல விழுதாக அரைத்து, வில்லையாகத் தட்டி, காயவைத்து கோலமிட பயன்படுத்துவர்.
தேவைக்கு ஏற்ப சில வில்லைகள் எடுத்து பக்குவமாய் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து கோலமிடுவது சிறப்பு. எறும்புகளுக்கும் உணவாகும்.

கோல மாவு வில்லைகள்

கோலத்தின் முக்கிய அம்சங்கள்: சதுர வடிவமாகவும், 4 தேர்கள் (முக்கோண வடிவம்) வீட்டின் மேற்கூரைகளாகவும்,கால்களை விட சற்று பெரிதாக இட வேண்டும். அரண்மனை போன்ற கட்டிட அமைப்பு ராஜ பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று கருத்தில் கொள்ளலாம்,

வெளி கோட்டமைப்பு:

8 கால்கள் (அஷ்ட பாலகர்களாக கருதப்படுகிறது) 8 திக்கும் இருந்து நல்ல செய்திகளை ஈர்க்கும் சக்தி படைத்திடவும், கோலத்தின் கட்டத்திற்கு உள்ளே, அலை அலையாய் உள்ள நெளிகள் ஆறுபோல் பெருகி அருவிபோல் தழைத்திட, என்ற கருத்தாகும். மிக முக்கியமாக கோலத்தை சுற்றி இரட்டை புள்ளிகள் இட்டிட வேண்டும். புள்ளிகள் என்பது நகரத்தார் இன விருத்தியைக் குறிப்பிடுகிறது. ஆகவே, புள்ளிகள் பெருகிடவும் இணைந்து வாழ்ந்திடவும் இங்கு வடிவங்களாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

கோலத்தின் நான்கு மூலைகளிலும் சங்கு, அல்லது சக்கரம் இடுவர். இது தெய்வாம்சம் பொருந்தியதாக கூறப்படுகின்றது. மற்றுமொரு கருத்து கடல் கடந்து வணிகம் (பொருளீட்டி) செய்துவரும் ஆண்மக்கள் சுகமே திரும்பி வீடு வந்தடைய விரும்பி இடப்படுகின்றது.
கோலத்தின் நான்கு பக்கமும் சக்கரவடிவில் முக்காலி அல்லது துணை கோலம் என்பர் இது வீட்டின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

எப்போது போடலாம்: கோவில் நிகழ்வுகள், சுப நிகழ்ச்சி, திருமண வீடு, விசேட நாட்களில் இதை முக்கிய கோலமாக இடுவர்.

நடு வீட்டுக்கோலத்தின் வகை : நடு வீடு என்பது இங்கு பூஜை அறை ஆகும், நடு வீட்டுக்கோலம் என்பது வீட்டின் நடுவே என்று பொருள் படுத்துவதைவிட சுப நிகழ்ச்சி நடந்திடும் வீடு / இடம் என்று கருத்தில் கொள்ளலாம்.
இது நடு வீட்டுக்கோலம், பொங்கல் கோலம், அடுப்புக்கோலம், மனைக்கோலம், ஆகிய வகைகளில் இடுவது வழக்கம்.

உள் அமைப்பு, அடைப்பு வடிவங்கள்:

கோலத்தின் உள்ளே இடப்படும் அடைப்பு வடிவங்கள் முற்காலத்தில் கடல் கடந்து வணிகத்தொழில் செய்து வந்தமையால் பொதுவாக கடல் சார்ந்த வடிவங்களாக, மீன், மீன் செதில்கள், சங்கு, தாமரை, கடல் அலைகள் போன்ற வடிவங்களை கருத்தில் கொண்டு கோலத்தில் பிரதிபலிப்புகளாக வடிவமைத்தனர்.
பின்னர் அது சில மாற்றங்களுடன் அந்தந்த வைபவங்களுக்கு ஏற்றது போல் வடிவங்கள் அமைக்கப்படுகிறது. உதாரணமாக, கல்யாண வீட்டுக்கோலத்தில் – மாலைகள், மலர்கள், சங்கு, பூச்செண்டு இடுவர்.கோவில்களில் முருகனுக்கு: விளக்கு, மயில், வேல், சேவல், மலர் எனவும், பெருமாளுக்கு: சங்கு, சக்கரம், இலக்குமிக்கு: தாமரை, கலசம் போன்ற வடிவமாக இந்த கோலத்தில் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

வரைபட விளக்கம்:

  1. வெளிப்புற சதுரக்கோடு
  2. உட்புற சதுரக்கோடு
  3. தேர் (நாற்புறமும்)
  4. உள்ளடைப்பு இரண்டு கோடுகளுக்கு இடையே நெளியும், வீட்டினுள் விருப்பத்திற்கு ஏற்ப அல்லது வைபவங்களுக்கு ஏற்றார் போல் வடிவங்கள் அமைக்கலாம்.
  5. கால்கள் (8 நாற்புறமும் நெளி, கட்டம், தோரணம் போன்ற உள்ளடைப்புகள் போடலாம் )
  6. தாமரை (நாற்புறமும்)
  7. சங்கு (நாற்புறமும்)
  8. முக்காலி /துணைக்கோலம் (நாற்புறமும்)
  9. இரட்டை புள்ளி அமைத்தல் (கோலத்தை சுற்றிலும் இடைவிடாமல் இரண்டு வரிசை புள்ளி குத்துதல்)

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், நகரத்தார்கள் கலைநுணுக்கம், தெய்வபக்தி, குடும்ப ஒற்றுமை என நற்பண்புகள் நிறைந்த வளமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தனர். அதன் வழி நாம் பின்பற்றி பெருமை கொள்வோமாக.

கோலத்தின் ஆராய்ச்சி பற்றி ஏதும் கருத்துக்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ள வேண்டியது

நன்றி

சில படங்கள் கூகுள் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

சைவ மட்டன் பிரியாணி/ Soya Biryani

சைவ மட்டன் பிரியாணி:
சுவையான பிரியாணியில் பல வகையுண்டு, சைவ மட்டன் பிரியாணி சோயா துண்டுகளால் தயாரிக்க படுகிறது. சோயா உயர் புரத மற்றும் பல வகை உணவுகள் சைவ மற்றும்அசைவ மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.

Saiva mutton Biryani
Saiva mutton Biryani

செய்யத்தேவையான  பொருட்கள்:
சோயா- 1/2 கோப்பை,ஊறவைத்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பெரிய வெங்காயம் – 1
தக்காளி -2
பச்சை மிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
கறி வேப்பிலை-1 கொத்து
மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்-1/2 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
எண்ணெய்- 3 மேஜைக்கரண்டி
நெய்-1 மேஜைக்கரண்டி
பாசுமதி அரிசி-2 கோப்பை
தேங்காய்ப்பால் அல்லது தயிர்-1/2 கோப்பை
தாளிக்க:
முந்திரி-5 ,7
பட்டை-1 அங்குலம் -2
கிராம்பு-2
பிரியாணியிலை-3 அங்குலம்
ஏலக்காய்-2
கல்பாசிப்பூ-1
ஜாதிப்பத்திரி-1 அங்குலம்
மிளகு-1/4 தேக்கரண்டி

img_3756
அரைக்க:
புதினா,மல்லி இலை 1/2 கோப்பை
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம் -1தேக்கரண்டி
பச்சை மிளகாய்-3
செய்முறை:
1அரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்
2. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் தாளிதம் செய்யவும்.
3. இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4. பின்னர், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் ஊறவைத்து நறுக்கிய சோயா சேர்த்து வதக்கவும்.

img_3759நன்கு வதங்கிய பின்னர்,அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.                                                                                                                                             5.தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தண்ணீர் 2 கோப்பை  மற்றும் ஊறவைத்த அரிசி, சேர்த்து கலந்து, கொதித்ததும் குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும்.

img_3763img_3764
மல்லி இல்லை தூவி, முந்திரி நெய்யில் வறுத்து அதையும் தூவி பரிமாறவும்.
தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.                                                                                                                                                   6. சுவையான .சைவ மட்டன் பிரியாணி ரெடி.

img_3769

அன்னாசிப்பழ கேசரி / Pineapple kesari

அன்னாசிப்பழ கேசரி:

For English recipe please click:   http://wp.me/p1o34t-16H
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை இந்தக் கேசரி, சில நிமிடங்களில் தயார் செய்து பரிமாரிவிடலாம். உள்ளடங்கும் பொருட்களும் அன்றாடம் நம் அடுப்பங்கரையில் உபயோகப்படுத்துவது என்பதால் நினைத்ததும் தயங்காது செய்துவிடலாம். கேசரியில் பல வகை உண்டு, முறை ஒன்றே மூலப்பொருள்தான் மாறுபடும். இந்த வகையில் ஒரு சிறிய மாற்றமாகவும், மாறுபட்ட சுவையுடன் இந்த அன்னசிப்பழ கேசரி தயாரிப்போம்.

அன்னாசிப்பழ கேசரி
அன்னாசிப்பழ கேசரி

செய்யத்தேவையான பொருட்கள்:
வெள்ளை ரவை -1 கோப்பை
அன்னாசிப் பழம் நறுக்கியது-1 கோப்பை
சீனி-1 1/4 கோப்பை
ஏலக்காய் பொடி -1/4 தேக்கரண்டி
நெய்-3 மேஜைக்கரண்டி
மஞ்சள் வண்ணப் பொடி ஒரு சிட்டிகை
முந்திரி, திராட்சை 2 மேஜைக்கரண்டி

செய்முறை:
1. வாணலியில் நெய் சூடேற்றி முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
2. அதே நெய்யில் நறுக்கிய அன்னசிபழத்தை 3 நிமிடம் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

images
3. பின்னர் இன்னும் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து ரவையை 5 நிமிடம் வரை கருகிவிடாமல் மிதமான தீயில் கவனமாக சற்று நிறம் மாறும் வரை வறுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
4. ஒரு பானில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும், கொதித்ததும் வண்ணப் பொடி, ஒரு மேஜைக்கரண்டி நெய் மற்றும் வறுத்த அன்னாசிப்பழத்தை சேர்க்கவும், பின்னர் வறுத்து ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
5. ரவை வெந்ததும் தீயைக் குறைத்துக்கொள்ளவும், அளந்து வைத்துள்ள சீனியை சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிவிடவும்.
6. நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறவும்.
7. வறுத்த முந்திரி, திரட்சி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான அன்னாசிப்பழக் கேசரி தயார்.

மாங்காய் தொக்கு / Mango Thokku

மாங்காய் தொக்கு :
சத்து நிறைந்த மாங்காய், பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும் அது மாங்காயின் குணம்.”மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்” என்பது பழமொழி. உணவில் பல விதமாக இந்த மாங்காயைப் பயன்படுத்தலாம். மாங்காய் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான். இவ்வகையில் சுவையான மாங்காய் தொக்கு இன்று காண்போம்.

20160429085953
தொக்கு செய்யத்தேவையான பொருட்கள்:
மாங்காய்-2
உப்பு -2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 மேஜைக்கரண்டி
வெந்தயத்தூள்-1 1/2 தேக்கரண்டி,. 1 தேக்கரண்டி வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
சுத்தமான நல்லெண்ணெய் -4 மேஜைக்கரண்டி
பொடித்த வெல்லம் -1 1/2 மேஜைக்கரண்டி
கடுகு-1 தேக்கரண்டி
பெருங்காயம் -1/2 தேக்கரண்டி
செய்முறை:
மாங்காயை நன்கு கழுவி சுத்தமான துணியால் துடைத்து பின்னர் துருவிக்கொள்ளவும்.

20160429083655
வானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளிக்கவும், பெருங்காயம் சேர்க்கவும்.

20160429083933
துருவிய மாங்காயை சேர்த்து வதக்கவும்.

20160429084217
மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள், உப்பு, வெந்தயப்பொடி மற்றும் வெல்லம் சேர்த்து இளந்தீயில் வதக்கவும்.

20160429084723
மாங்கை நன்கு ஒன்று சேர்ந்து எண்ணெய் விட்டு வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
நன்கு ஆரிய பின்னர் கொள்கலனில் வைத்து பயன்படுத்தவும்.

Mango ThokkuMango Thokku
Mango ThokkuMango Thokku

வரகு அரிசி பொங்கல் / Kodo Millet Pongal

வரகு அரிசி பொங்கல்:வரகு அரிசி பொங்கல்:
சிறுதானியங்களின் மகிமை பரவி வரும் இக்காலத்தில் அதன் பலவிதமான செய்முறைகளும் கையாளப்படுகிறது. அரிசி கொண்டு செய்யப்படும் அனைத்து பதார்த்தங்களுமே அதற்கு பதிலாக இந்த சிறுதானிய வகைகள் கொண்டு செய்யலாம் என்பது எளிமையான ஒரு கருத்து. ஒப்பிடும் போது இதன் சுவையும் கூடுதலாகும். பண்டயகலத்தில் இருந்து தொன்று தொட்டு வரும் அற்புதமான ஆரோக்கிய செய்முறைகளையே பின்பற்றி பயன்பெறலாம்.
சிறுதானியங்கள் பசையம் அற்றவை.

images (5)
உரம் இல்லாத மண் பூச்சிகளை ஈர்ப்பதில்லை. உயர் வெப்பநிலை நிலைமைகளின் கீழ் குறுகிய காலத்தில் வளரும் தன்மை உடையது. அரிசியை விட பன்மடங்கு நார்ச்சத்து உள்ளது என்பதால் இது அதிகம் பயன் தரக்கூடியது.

12966339_1076609605713982_336641262_n
வரகு அரிசி பொங்கல் செய்யத்தேவையான பொருட்கள்:
வரகு அரிசி-50 கிராம் அல்லது 1/2 கோப்பை (4-6பேருக்கு பரிமாறலாம்).

LITTLE MILLET
பாசிப்பருப்பு-2 மேஜைக்கரண்டி
வெல்லம் பொடித்தது  -1/2 கோப்பை, பால்- 1/2  கோப்பை
நெய்- 2 மேஜைக்கரண்டி
முந்திரி திராட்சை -2 மேஜைக்கரண்டி
தண்ணீர் -2 கோப்பை
ஏலக்காய் பொடி -1/2 தேக்கரண்டி.
செய்முறை:
1. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
2. பாசிப்பருப்பு மற்றும் வரகு அரிசியை 4 லிருந்து 5 முறை நன்கு கழுவி, குக்கரில்இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வேகவைத்துக்கொள்ளவும்.
3. வெல்லம், சிறிது பால் சேர்த்து இளந்தீயில் வெல்லக்கட்டிகள் கரையும் வரை கிளறவும்.

12966478_1076609722380637_614590640_n
4. நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும், நெய், வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும்.
5. சுவையான வரகு அரிசி பொங்கல் தயார்.

Varagu arisi Pongal
                                                                                                                               Varagu arisi Pongal

 

தெறக்கி கோசுமல்லி / Therakki kosumalli

தெறக்கி கோசுமல்லி:
செட்டிநாடு ஸ்பெஷல் கோசுமல்லி ஒரு இதமான சுவையுடைய  இட்லி, தோசைவகை தொட்டுக்கொள்ளும் பதார்த்தம் என்று சொல்லலாம். உப்பு, புளிப்பு, காரம் என எல்லா சுவையும் மிதமாக இருக்கும். அதில் இரண்டு வகையுண்டு, ஒன்று கத்தரிக்காயை அவித்து தோலுரித்து அல்லது நேரடியாக சுட்டு தோலகற்றி செய்வது மற்றொரு முறை சிறு துண்டுகளாக நறுக்கி தெறக்கி செய்வது. நாம் இங்கு காண இருப்பது இரண்டாவது முறை தெறக்கி கோசுமல்லி. ஒப்பிடும் போது இதில் சுவை கொஞ்சம் கூடுதலாகும் ஏனெனில் நறுக்கிய காய்கள் எண்ணெயில் வதக்குகிறோம் 🙂 . அவித்து செய்யும் முறை முன்பே பதிவு செய்துள்ளோம் . இது இட்லி, தோசைவகை, ஆப்பம் இவற்றிற்கு ஏதுவாகும்.

தெறக்கி கோசுமல்லி / Therakki kosumalli
தெறக்கி கோசுமல்லி / Therakki kosumalli

செய்யத்தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்-1/4 கிலோ
தக்காளி-1
பச்சைமிளகாய்-4 லிருந்து 7 வரை
கறிவேப்பிலை 1 கொத்து
சின்ன வெங்காயம்-10
புளிகரைத்தது – 1 மேஜைக்கரண்டி அளவு
தாளிக்க:
எண்ணெய் -5 தேக்கரண்டி
கடுகு-1/2 தே .க
உளுத்தம்பருப்பு-1/2 1/2 தே .க
செய்முறை:
1. கத்திரிக்காய் சிறு துண்டுகளாக (கூட்டுக்கு நறுக்குவது போல்) நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
2.வெங்காயம் தோலுரித்து, தக்காளி பச்சை மிளகாயையும் வெட்டி தயாராக வைக்கவும்
3.எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்து, வெங்காயம், கத்திரிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.(நறுக்கிய கத்திரிக்கயை நீர் வடித்து, எடுத்து வதக்கவும்).

12939147_1074791755895767_686246781_n
4. நன்கு வதங்கி தோல் நிறம்மாறி வரும்போது கறிவேப்பிலை, வெட்டிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

12939539_1074791749229101_163981261_n
5. தக்காளி வதங்கியதும், உப்பு, கரைத்த புளி சேர்த்து 3 கோப்பை தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
குக்கரில் வைத்தால் தண்ணீரை குறைத்துக்கொள்ளவும் ஒரு விசில் வரும்வரை விட்டு எடுக்கவும்.
6. கத்திரிக்காய் வெந்ததும் கடைந்துவிடவும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்,

தெறக்கி கோசுமல்லி ரெடி

12939374_1074791732562436_1180797678_n

முட்டைக்குழம்பு /Muttai kulambu/ Egg curry

முட்டை க்குழம்பு:

முட்டைக்குழம்பு, பார்க்கும்போதே பசியைத்தூண்டும் அவித்தமுட்டை காரக்குழம்பு. பெரும்பாலும் முட்டையை விரும்பி உண்ணுபவர்கள் அதிகம் சிலருக்கு அவித்தமுட்டை, சிலருக்கு பொரித்த முட்டை இன்னும் சிலர் தோசை வகையில் விருப்பாம் காட்டுவார்கள். இந்த முட்டைக்குழம்பு சுவையும் மனமும் நிறைந்த ஒன்று, அவித்தமுட்டையோடு, குழம்பு கொதிக்கும் பொது ஒரு முட்டையை உடைத்து நடுவில் ஊற்றி கொதிக்கவைத்து செய்வது இன்னும் சுவையைக் கூட்டும். இதன் முறை விளக்கம் காண்போம்.

முட்டை க்குழம்பு
முட்டை க்குழம்பு

தேவையான பொருட்கள்:
முட்டை-4(3+1)
வெங்காயம்-1
பூண்டு 7 பல்
தக்காளி-1
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
சாம்பார் மிளகாய்த்தூள்-2 1/2 தேக்கரண்டி, அல்லது மிளகாய்த்தூள்-1 மல்லித்தூள் 1 என்னும் விகித்தில் எடுத்துக்கொள்ளவும்.
புளிச்சாரு -2 மேஜைக்கரண்டி
செய்முறை:
1.முட்டை 3 அவித்துக்கொள்ளவும்.அவித்த முட்டையின் மேல் சிறிய கீறல்கள் போடவும் இதனால் குழம்பு உள்ளே சென்று முட்டயின் சுவயைக்கூட்டும். ஒரு முட்டையை  குழம்பு கொதிக்கும்போது ஊற்றவேண்டும்.
2.வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
3.வானலியில் எண்ணெய் காயவைத்து சோம்பு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும்.
4.பிறகு, வெங்காயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியதும் தக்காளி சிறிது உப்பு சேர்த்து, தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.
5.இப்போது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் புளிகரைச்சல் சேர்க்கவும்.
6.இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வரைகொதிக்கவிடவும்.

முட்டை க்குழம்பு
முட்டை க்குழம்பு

7.நன்கு கொதிக்கும் பொது தீயை சிம்மில் வைத்து உடைத்த முட்டயை நிதானமாக நடுவில் ஊற்றவும்.                                                                                         8.இரண்டு நிமிடம் இளந்தீயில் கொத்திதபின் தீயை கூட்டவும், நன்கு கொதிவரும்போது அவித்த முட்டையை சேர்த்து இன்னும் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.

smar
9. சுவையான முட்டை குழம்பு தயார்.
குறிப்பு:
மிதமான தீயில் சமைத்தால் எண்ணெய் மேலே மிதந்து வரும்.
உடைத்தமுட்டை ஊற்றும் பொது கண்டிப்பாக தீயை குறைக்கவேண்டும் இல்லாவிட்டால் முட்டை பிரிந்துவிடும்.
ஊற்றிய முட்டை வேகும்வரை கரண்டி போட்டு கிளறக்கூடாது.(3 நிமிடம் )

நீர் மோர் / Neer mor / Flavoured Buttermilk

நீர் மோர் :
நீர் மோரின் அதிசயங்களை சிறிது அறிவோம் :

குறிப்பாக கோடையில் வெப்பநிலை அதிகமாக உயரும் போது, உடல் வெப்பம் அதிகரிக்கும், அதை குறைக்க மோர் பருகுவது நன்மை பயக்கும். ஒரு சிறந்த குளிர்விப்பானாக விளங்குகிறது.
மோரில் லாக்டிக் அமிலம் அதிக அளவு இருப்பதால் நோய்களுக்கு எதிராக போராட அது தயாராகி மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது . கால்சியம் சத்தை அதிகரித்து எலும்புகளை வலுவாக்குகிறது, ரத்த அழுத்தம் குறைகிறது,வாய்ப்புண் குணமடைகிறது, மேலும், மோர் அடிக்கடி பருக எடையை குறைக்கலாம். அதே சமயம் , நம் உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்டது. மோரில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிக அளவில் கொண்டிருக்காது.
நீர்மோர் தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.

நீர் மோர் / Neer mor / Flavoured Buttermilk
நீர் மோர் / Neer mor / Flavoured Buttermilk

நீர் மோர் செய்யத்தேவையான பொருட்கள்:
தயிர் – 1/4 லிட்டர்
குளிர்ந்த தண்ணீர் – 1 லிட்டர்
பச்சை மிளகாய்-2
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் -1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
மல்லி இலை பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் -1

செய் முறை :

1. மல்லி இலை, உப்பு, தயிர், எலுமிச்சம்பழம் இவை தவிர,மேல்கூரியுள்ள அனைத் பொருட்களையும் ஒன்றிரண்டாக இடித்து அல்லது அரைத்துக்கொள்ளவும்.

12825329_1053230104718599_305104050_n (1)

2. தயிரை உப்பு சேர்த்துக்கடைந்து கொள்ளவும்.
3. எலுமிச்சை சாறு, அரைத்த / இடித்த பொருட்களை கலந்து, அதோடு குளிர்ந்த தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. வடிகட்டி கொண்டு வடிகட்டவும்.

1932039_1053230074718602_651887104_n

5. பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி பருகவும்.

12837230_1053230174718592_1662199874_o

பால் பணியாரம் / Chettinad special Pal Paniyaram

பால் பணியாரம் :
செட்டிநாடு ஸ்பெஷல் பால் பணியாரம் பெரும்பாலான விருந்துகளிலும் சிறப்பாக பரிமாறப்படும் ஒரு முக்கிய இனிப்பு வகை. அழகான வெள்ளை நிறத்தில், தேங்காய்ப்பால் மற்றும் பசும்பாலில் அளவான இனிப்பு கலந்து ஏலக்காய் அல்லது குங்குமப்பூ வாசனையோடு, பாலில் ஊறிய பூப்போன்று சுவையான பால் பணியாரம். விவரிக்க வார்த்தைகள் குறைவு சுவையோ அலாதி .

பால் பணியாரம் / Chettinad special Pal Paniyaram
பால் பணியாரம் / Chettinad special Pal Paniyaram

செய்முறை:
பச்சரிசி- 1 கோப்பை
உளுந்து – 1 கோப்பை
உப்பு-1/2 தேக்கரண்டி
தேங்காய் பால்- ஒரு மூடி பால்-2 கோப்பை
பசும்பால் காய்ச்சியது – 2 கோப்பை
சீனி -3.4 கோப்பை அல்லது தேவைக்கேற்ப
செய்முறை விளக்கம்:
1. பச்சரிசி உளுந்து இரண்டையும் 2 மணி நேரம் நன்கு கழுவி ஊறவைக்கவும்.
2.நன்கு ஊறிய பின்னர் கிரைண்டரில் நல்ல விழுதாக அரைக்கவும், முழு உளுந்தோ அரிசியோ இல்லாமல் கவனமாக அரைக்கவும்.
3. மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் ஊற்றாமல் சிறிது சிறிதாக தெளித்து வடை மாவு ஆட்டுவது போல் கெட்டியாக ஆட்டவும். பந்து போல் அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும்.

10621974_1051999148175028_1212424320_n
4.பசும்பாலைக்காய்ச்சி, தேங்காய் பால் எடுத்து, இரண்டையும் ஒன்றாக சீனி சேர்த்து கலந்து தயாராக வைக்கவும்.

Coconut Milk
5. வாணலியில் எண்ணெய் காய வைத்து அரைத்த மாவை கையில் எடுத்து விரல்களினால் சிறு சிறு (இலந்தைப்பழம் அளவிற்கு) உருண்டைகளாக காய்ந்த எண்ணெயில் மெதுவாக போடவும்.
6. இரு புறமும் இளம் மஞ்சள் நிறம் வரும் வரை (படத்தில் காண்பது போல்) வேக விடவும்.
கவனம் இளந்தீயில் பொரித்தெடுப்பது உத்தமம்.

12804333_1051999124841697_106308062_n7.பாத்திரத்தில் 2 லிட்டர் அளவுக்கு தண்ணீர் கொதிக்க வைத்து தயாராக வைக்கவும்.
8.பொரித்த பணியாரத்தை சுடு நீரில் 3 நிமிடம் வரை போட்டு எடுக்கவும்.

12804199_1051999134841696_592966671_n9. நீரை நன்கு வடித்து பிறகு பணியாரத்தை கலந்த பாலில் சேர்த்து ஊர வைக்கவும்.

12834987_1051999111508365_532057457_n
10. குங்குமப்பூ, அல்லது ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும்.

12825678_1051397504901859_1423180191_n

மரவள்ளி கிழங்கு தோசை / Tapioca Roast

மரவள்ளி கிழங்கு தோசை :
மரவள்ளி கிழங்கு எல்லா காலத்திலும் கிடைக்கும் ஒரு எளிமையான வகை கிழங்கு.கேரள மக்கள் அதிகம் பயன்படுத்துவர்.
மரவள்ளி கிழங்கு தோசை மொரு மொருப்பகவும் சுவையாகவும் இருக்கும்.
மிளகாய் சட்னி, சாம்பார் தேங்காய் சட்னி போன்றவை நல்ல பொருத்தம்.

மரவள்ளி கிழங்கு தோசை / Tapioca Roast
மரவள்ளி கிழங்கு தோசை / Tapioca Roast

செய்யத்தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு-250 கிராம்
பச்சரிசி -250 கிராம்
வெந்தயம்-1 தே .க
சீரகம்-1 தே.க
பச்சை மிளகாய்-3
செய்முறை :
பச்சரிசி யை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

12077318_967074766667467_572586459_n

மரவள்ளி கிழங்கு தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவும.                  அரிசி, சீரகம், வெந்தயம், பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். மரவள்ளி கிழங்கையும் அரைத்து மாவுடன் செர்த்துக்கலக்கவும்.

12077052_967074773334133_844261510_n12087547_967074776667466_1674288020_n
அதிக நேரம் புளிக்க வைக்கத்தேவயில்ல 2 லிருந்து 3 மணி நேரம் வைத்து தோசை வார்க்கலாம்.
தோசை மாவு நீர்க்க வைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல் நன்கு சூடான பிறகு ஒரு கரண்டிமாவு எடுத்து மெல்லிய தோசையாக வார்த்தெடுக்கவும்.
விருப்பத்திற்கேற்ப எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

12067305_967074753334135_942300812_n