கோதுமை இட்லி/Wheat Idli

கோதுமை இட்லி :
மிருதுவான கோதுமை இட்லி,
இட்லி நமது பிரதானமான உணவாக இருப்பினும் பெரும்பாலானோர் தவிர்த்திடுவார் காரணம் இதற்கு ஏதுவான துணை சேர்ப்பதில்லை என்றே கூறலாம், தொட்டுக்கொள்வதற்கு சட்னி, சாம்பார் இன்னும் நிறைய சுவையான பதார்த்தங்கள் துணை சேர்ப்பின் இட்லி ஒரு அருமையான பலகாரம். இயற்கையாக புளிக்க வைத்து, ஆவியில் வேகவைத்து செய்வதால் இதன் சத்து இன்னும் அதிகமாகிறது, எளிதில் ஜீரணிக்க கூடியது. இதுவே கோதுமை சேர்த்து செய்யும் பொழுது இன்னும் சிறப்பாகிறது, சந்தேகமில்லாமல் சுவை கூடுதலாகவே இருக்கும்.
சுவையாக கோதுமை இட்லி எப்படி பஞ்சு போல செய்து அசத்தலாம்னு பார்க்கலாம்.

ஆரோக்கியச்சிறப்பு -பாசிப்பருப்பு பச்சடி, சிவப்பு /முளை கீரை பொரியல்


செய்யத்தேவையான பொருட்கள்:

கோதுமை-1 கோப்பை ( இங்கு நான் பஞ்சாபி கோதுமை சேர்த்து செய்தேன், சம்பா கோதுமையும் சேர்க்கலாம்).
இட்லி அரிசி-1 கோப்பை (அல்லது சிவப்பரிசி, சிறுதானிய மாப்பிள்ளை சம்பா, மூங்கில் அரிசி போன்ற ஏதேனும் ஒன்று கூட சேர்க்கலாம்)
முழு உளுந்து-1/4 கோப்பை
வெந்தயம்-1 1/2 தேக்கரண்டி
கல் உப்பு-2 தேக்கரண்டி
செய்முறை:
1. அரிசி, கோதுமை இரண்டையும் நன்கு தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. உளுந்து மற்றும் வெந்தயம் இரண்டையும் அலசி தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
3. கிரைண்டரில் உளுந்தையும் வெந்தயத்தயும் முதலில் அரைத்தெடுத்துக்கொள்ளவும், பின்னர் ஊறவைத்த அரிசியும் கோதுமையும் அரைக்கவும். எல்லாவற்றையும் மொத்தமாக சேர்த்து அரைக்கலாம் இருப்பினும் இப்படி தனியாகஅரைத்தால் அதிக மிருதுவாக இருக்கு.
4. இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து உப்பு கலந்து கையினால் நன்கு ஒரு நிமிடம் கலந்து விடவும், இட்லி மாவு கலப்பது போன்று கலக்கவும் இது மாவு இயற்கையாக புளித்து வருவதற்கு உதவுகிறது.

5. பின்னர், 6 முதல் 8 மணி நேரம் கழித்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்து, உடன் சுவையான சாம்பாருடன் பரிமாறவும்.

குறிப்பு
கோதுமைக்கு பதிலாக கோதுமை ரவையும் சேர்த்து செய்யலாம்.

வத்தல் சாதப்பொடி/Vathal Rice mix

வத்தல் சாதப்பொடி
சுண்ட வத்தல் மற்றும் மணத்தக்காளி வத்தல் சேர்த்து செய்யும் அற்புதமான, ஆச்சரியமூட்டும் சத்துக்கள் அடங்கிய சாதப்பொடி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகிட நம் முன்னோர்கள் பின்பற்றிய அற்புத சக்தி, இயற்க்கை உணவு வகை இந்த பொடி செய்வதும் சுலபம், சேர்க்கும் பொருட்களும் குறைவே. சாதாரணமாக வத்தல் குழம்பில் சேர்க்கும் பொது பெரும்பாலும் அதை அகற்றி விட்டே உட்கொள்கிறோம் வத்தலின் முழுமையான சத்து நமக்கு உள்ளே சேருவது இல்லை இதன் அருமை தெரியாமல் நாம் அதன் சுவை கருதி அகற்றி விடுகிறோம் ஆனால் இதன் உண்மையான சத்துக்கள் நாம் உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது சில குறிப்புகள் இங்கே,

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைத் தவிர, உயர்தர புரதங்கள், இதன் உணவு இழைகள் அடர்த்தியாக நிரம்பியுள்ளன. இது இயற்கையாகவே கார்ப்ஸ், கலோரிகள், கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது, இது எடை இழப்பு உணவுகளில் இணைவதற்கு ஏற்றதாக அமைகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது

இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது

நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது

மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது

இதய ஆரோக்கியம் தருகிறது

காய்ச்சலை திறம்பட எதிர்த்து நிற்கிறது

சிறுநீரக செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது

நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு சக்தியை கொடுக்கிறது.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சக்தியாகும். சூப்கள், கறி, பருப்பு போன்ற பல உணவுகளை சமைப்பதில் இதைப் பயன்படுத்தலாம், மேலும் உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் சுவையூட்டப்பட்ட உலர்ந்த வகையாகவும் உட்கொள்ளலாம். உங்கள் வழக்கமான உணவில் சேர்க்கவும், அது வழங்கும் அற்புதமான ஆரோக்கிய சலுகைகளை முழுமையாக பெறலாம்.

சாதப்பொடி :

பொடி வகையாக செய்யும் பொது உட்கொள்ளும் அளவு சற்று அதிகமாகும், முழுமையான சக்திகளையும் பெற உதவும் சற்று கசப்பு சுவைத்தான், எனினும் நெய்யோடு சேர்த்து உண்ணும் போது அதிகம் தெரியாது பாவற்காய் போன்றே இருக்கும், தேவைப்பட்டால் இங்கு குறிப்பிட்ட அளவிற்கு சற்று அதிகமாக பருப்பு சேர்த்துக்கொள்ளலாம் கசப்புத்தன்மையை குறைக்க உதவும். இதோ கீழே செய்முறை.
செய்யத்தேவையான பொருட்கள்:
சுண்ட வத்தல் – 50 கிராம் பக்குவமான முறையில் செய்த வத்தல் பெற்றி

Https://www.chettinadsnacksonline.com/collections/vathal/products/sundakkai-vathal

  • (மிளகு தக்காளி வத்தல்)-25 கிராம்
  • மணத்தக்காளி வத்தல்-25கிராம்
  • உளுத்தம் பருப்பு-50 கிராம்
  • மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்-3,4
  • மிளகு-1/2 தேக்கரண்டி
  • சீரகம் ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை ஒரு பிடி
  • பெருங்காயம்-1/4 தேக்கரண்டி
  • உப்பு சிறிது ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.
vatthal

செய்முறை:
வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்
பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம், வறுக்கவும் இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் வருத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடி யாக அரைத்துக்கொள்ளவும்.

சூடான சாதத் தோடு நெய்சேர்த்து கலந்து சாப்பிடவும், ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திடவும்.

https://youtu.be/0vlMSuWcISA

பானகம்/Panakam

பானகம் : அகத்திற்கு உகந்த பானம்

சிறப்பறிவோம் செய்து பழகுவோம்:
பானகம், நீர் மோர் போன்ற வெயில் கால குளிர் பானங்கள் தாகம் தீர்ப்பது மட்டுமல்ல நமது உடல் சூட்டை தவிர்த்து நல்ல புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் தரவல்லது வெயிலினால் ஏற்படும் சோர்வைத்தவிர்க்க இவை மிகவும் அருமையான பானம், வயிற்று வலி, நீர் கடுப்பு கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் குறைக்க வல்லது. முக்கியமாக பானக்கம் வெல்லம், சுக்கு, எலுமிச்சை சாறு, சேர்ப்பதால் ருசியும் நன்றாக இருக்கும் , பொதுவாக, கோவில் விசேடங்கள், தேர், திருவிழா சமயங்களில் தண்ணீர் பந்தல் வைத்து விநியோகம் செய்வதுண்டு.
செய்வது சுலபம், கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்களை விட இப்படி கலந்த பருகுவது உடலுக்கும் , மனதிற்கும் பல நன்மைகளை பெறுக்கிடும் என்பது நம் பழக்கத்திலிருந்து கண்டறியப்பட்ட உண்மை. சிறு கவனம் பெரிய நன்மை அருமை புரிந்து நம் சந்ததியினருக்கு உணர்த்துவோம். பானகம் லெமனேடுக்கு மற்றுமோர் பெயர் எனலாம்.


செய்யத்தேவையான பொருட்கள்:
எலுமிச்சை -1 (சாறு எடுத்துக்கொள்ளவும்)
வெல்லம் பொடிதத்து-3 மேஜைக்கரண்டி
சுக்கு தூள்-1/4 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் -1/4 தேக்கரண்டி
தண்ணீர் 2 கோப்பை (400மில்லி )
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடி தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும்,(வெல்லத்தில் சிறிது உப்பு சுவை இருப்பதால் மேலும் நாம் உப்பு சேர்க்கத்தேவையில்லை)

அதில் எலுமிச்சை சாறு, சுக்குத்தூள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும் வடிகட்டத்தேவையில்லை அப்படியே பரிமாறலாம்.
செய்வது சுலபம், கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்களை விட இப்படி கலந்த பருகுவது உடலுக்கு, மனதிற்கும் பல நன்மைகளை பெறுக்கிடும் என்ப நம் பழக்கத்திலிருந்து கண்டறியப்பட்டது.

நடு வீட்டுக்கோலம்/Naduveettu Kolam

செட்டிநாட்டு பாரம்பரிய நடு வீட்டுக்கோலம் :
நகரத்தார்கள் வாழும் பல்வேறு ஊர்களை உள்ளடக்கிய செட்டிநாடு பகுதி, பாரம்பரியம் மிக்க, உயர்ந்த கலாச்சாரம் நிறைந்த இடமாக உலகளவில் பேசப்படும் சிறப்பு பெற்றது. முற்காலத்திலிருந்தே, கலை நுணுக்கம், சுவையான உணவு பழக்கவழக்கங்கள், எந்த மாதிரியான சூழ்நிலையிலும் சிக்கனம், சாமர்த்தியம், கட்டுப்பாடு என பலதிறன்களை உள்ளடக்கி வாழ்ந்து வந்தனர். உயர்ந்த அர்த்தங்களோடு முன்னோர்கள் வழி வந்த சில வாழ்க்கை முறையே அதற்கு இன்றும் அடையாளமாக உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில், இந்த நடு வீட்டுக்கோலம் மிகுந்த அர்த்தங்கள் கொண்டது என்பதை உணரும் போது ஆச்சரியம் நிறைந்த ஒன்றாக உள்ளது. இறையருளோடு வளமான வாழ்க்கை வாழவும், செல்வச் செழிப்பு, குடும்பப் பிணைப்பு, ஒற்றுமை என ஒவ்வொரு அவையங்களையும் கருத்தில் கொண்டு முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டதை இந்த கோலத்தின் மூலம் நாம் காணலாம்.

குடும்பம் (வீடு) இப்படியாக இருக்க வேண்டும் என்பதை கோலத்தில் உள்ளடங்கிய அர்த்தங்களோடு படைத்திட்டனர்.

அனுபவம் மிகுந்த சில ஆச்சிமார்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளோம்

நடு வீட்டுக்கோலத்தில் உள்ளடங்கிய கருத்துக்கள்:

வடிவம்: சதுரம் – உயர்வு, தாழ்வு, ஏற்ற இறக்கம் என எந்த கருத்து வேறுபாடும் இல்லாத சம வடிவம் சதுரம் என்பதால் குடும்பத்தில் வேறுபாடு இல்லாத ஒரு நிலை வளர வேண்டி இந்த வடிவத்தில் கோலம் அமைக்கப்பட்டுள்ளது.

நிறம்: வெள்ளை– வெள்ளை நிறமானது பெரும்பாலும் முழுமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது.
தூய்மை மற்றும் தியாகத்தின் சின்னம் என்பதால், குடும்பத்தில் உள்ளோர் இப்படிப்பட்ட நல்ல குணங்களுடன் விட்டுக்கொடுத்து தூயமனத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டி அமைக்கப்பட்டது,

கோலம் போடும் மாவு: பயன்படுத்தப்படும் பொருள் பச்சரிசி
பச்சரிசியை சுத்தமாக அலசி ஊறவைத்து, நல்ல விழுதாக அரைத்து, வில்லையாகத் தட்டி, காயவைத்து கோலமிட பயன்படுத்துவர்.
தேவைக்கு ஏற்ப சில வில்லைகள் எடுத்து பக்குவமாய் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து கோலமிடுவது சிறப்பு. எறும்புகளுக்கும் உணவாகும்.

கோல மாவு வில்லைகள்

கோலத்தின் முக்கிய அம்சங்கள்: சதுர வடிவமாகவும், 4 தேர்கள் (முக்கோண வடிவம்) வீட்டின் மேற்கூரைகளாகவும்,கால்களை விட சற்று பெரிதாக இட வேண்டும். அரண்மனை போன்ற கட்டிட அமைப்பு ராஜ பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று கருத்தில் கொள்ளலாம்,

வெளி கோட்டமைப்பு:

8 கால்கள் (அஷ்ட பாலகர்களாக கருதப்படுகிறது) 8 திக்கும் இருந்து நல்ல செய்திகளை ஈர்க்கும் சக்தி படைத்திடவும், கோலத்தின் கட்டத்திற்கு உள்ளே, அலை அலையாய் உள்ள நெளிகள் ஆறுபோல் பெருகி அருவிபோல் தழைத்திட, என்ற கருத்தாகும். மிக முக்கியமாக கோலத்தை சுற்றி இரட்டை புள்ளிகள் இட்டிட வேண்டும். புள்ளிகள் என்பது நகரத்தார் இன விருத்தியைக் குறிப்பிடுகிறது. ஆகவே, புள்ளிகள் பெருகிடவும் இணைந்து வாழ்ந்திடவும் இங்கு வடிவங்களாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

கோலத்தின் நான்கு மூலைகளிலும் சங்கு, அல்லது சக்கரம் இடுவர். இது தெய்வாம்சம் பொருந்தியதாக கூறப்படுகின்றது. மற்றுமொரு கருத்து கடல் கடந்து வணிகம் (பொருளீட்டி) செய்துவரும் ஆண்மக்கள் சுகமே திரும்பி வீடு வந்தடைய விரும்பி இடப்படுகின்றது.
கோலத்தின் நான்கு பக்கமும் சக்கரவடிவில் முக்காலி அல்லது துணை கோலம் என்பர் இது வீட்டின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

எப்போது போடலாம்: கோவில் நிகழ்வுகள், சுப நிகழ்ச்சி, திருமண வீடு, விசேட நாட்களில் இதை முக்கிய கோலமாக இடுவர்.

நடு வீட்டுக்கோலத்தின் வகை : நடு வீடு என்பது இங்கு பூஜை அறை ஆகும், நடு வீட்டுக்கோலம் என்பது வீட்டின் நடுவே என்று பொருள் படுத்துவதைவிட சுப நிகழ்ச்சி நடந்திடும் வீடு / இடம் என்று கருத்தில் கொள்ளலாம்.
இது நடு வீட்டுக்கோலம், பொங்கல் கோலம், அடுப்புக்கோலம், மனைக்கோலம், ஆகிய வகைகளில் இடுவது வழக்கம்.

உள் அமைப்பு, அடைப்பு வடிவங்கள்:

கோலத்தின் உள்ளே இடப்படும் அடைப்பு வடிவங்கள் முற்காலத்தில் கடல் கடந்து வணிகத்தொழில் செய்து வந்தமையால் பொதுவாக கடல் சார்ந்த வடிவங்களாக, மீன், மீன் செதில்கள், சங்கு, தாமரை, கடல் அலைகள் போன்ற வடிவங்களை கருத்தில் கொண்டு கோலத்தில் பிரதிபலிப்புகளாக வடிவமைத்தனர்.
பின்னர் அது சில மாற்றங்களுடன் அந்தந்த வைபவங்களுக்கு ஏற்றது போல் வடிவங்கள் அமைக்கப்படுகிறது. உதாரணமாக, கல்யாண வீட்டுக்கோலத்தில் – மாலைகள், மலர்கள், சங்கு, பூச்செண்டு இடுவர்.கோவில்களில் முருகனுக்கு: விளக்கு, மயில், வேல், சேவல், மலர் எனவும், பெருமாளுக்கு: சங்கு, சக்கரம், இலக்குமிக்கு: தாமரை, கலசம் போன்ற வடிவமாக இந்த கோலத்தில் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

வரைபட விளக்கம்:

  1. வெளிப்புற சதுரக்கோடு
  2. உட்புற சதுரக்கோடு
  3. தேர் (நாற்புறமும்)
  4. உள்ளடைப்பு இரண்டு கோடுகளுக்கு இடையே நெளியும், வீட்டினுள் விருப்பத்திற்கு ஏற்ப அல்லது வைபவங்களுக்கு ஏற்றார் போல் வடிவங்கள் அமைக்கலாம்.
  5. கால்கள் (8 நாற்புறமும் நெளி, கட்டம், தோரணம் போன்ற உள்ளடைப்புகள் போடலாம் )
  6. தாமரை (நாற்புறமும்)
  7. சங்கு (நாற்புறமும்)
  8. முக்காலி /துணைக்கோலம் (நாற்புறமும்)
  9. இரட்டை புள்ளி அமைத்தல் (கோலத்தை சுற்றிலும் இடைவிடாமல் இரண்டு வரிசை புள்ளி குத்துதல்)

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், நகரத்தார்கள் கலைநுணுக்கம், தெய்வபக்தி, குடும்ப ஒற்றுமை என நற்பண்புகள் நிறைந்த வளமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தனர். அதன் வழி நாம் பின்பற்றி பெருமை கொள்வோமாக.

கோலத்தின் ஆராய்ச்சி பற்றி ஏதும் கருத்துக்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ள வேண்டியது

நன்றி

சில படங்கள் கூகுள் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

சிவப்பு அவல் பிடிகொழுக்கட்டை/Red Aval Kolukkattai

சிவப்பு அவல் கொழுக்கட்டை :இரண்டு விதமான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது 
சிவப்பு அவல் கொழுக்கட்டை சுவையானது மட்டுமல்ல சத்தானதும் கூட…குழந்தைகளும் விரும்பி சுவைப்பார்கள் .
சிவப்பு அவல் நிறைந்த சத்துக்களும், எளிதில் செரிக்கக்கூடியதுமான மனிதனுக்கு அவசியம் தேவையான
இரும்பு சத்து, எளிதில் செரிமானமாகும் தன்மை, குறைவான கலோரி மற்றும் நார்சத்து கொண்டது, நல்ல கார்போஹைட்ரெட் கொண்டதால் அருமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இதை உட்கொள்ளலாம்.
பொதுவாக அவலில் உப்புமா, இனிப்பு அவல் மற்றும் பாயசம் மட்டுமே செய்வதுண்டு, இங்கு கொஞ்சம் வித்யாசமாக அனைவரும் விரும்பி உண்ணும் கொழுக்கட்டை செய்யலாம்,

செய்யத்தேவையான பொருட்கள் : yield 15 nos
அவல் -1 கோப்பை
வெல்லம் -3/4 கோப்பை
தண்ணீர்-1 கோப்பை

தேங்காய் துருவல்-3 மேஜைக்கரண்டி

குறிப்பிட்ட அளவு தன்னீர் சேர்த்தல் அவசியம். அவல் தண்ணீர் உறிஞ்சும் சக்தி உடையது
முந்திரி -5
நெய்-2 மேஜைக்கரண்டி

செய்முறை:
அவலை வெறும் வாணலியில் இரண்டு நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும் .

சூடு ஆறியதும் மிக்ஸியில் ரவை போல பொடித்து கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் பொடித்த அவலை சேர்த்து அதில் 1 கோப்பை நீரை சிறுது, சிறிதாக தெளித்து பிசறி வைத்துக்கொள்ளவும்.(புட்டு போல கட்டிகள் இல்லாமல்)


அடுப்பில் ஒரு கடாய் வைத்து 1 கோப்பை வெல்லம்,1/2 கோப்பை நீர் சேர்த்து கொதிக்க விடவும் கட்டிகள் கரைந்ததும் வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.


இப்போது பிசறி வைத்துள்ள அவல் சேர்த்து கிளறவும், நன்கு கலந்து அடுப்பிலிருந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் சேர்த்து முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும், துருவிய தேங்காய் சேர்த்து சிறிது வறுத்து, ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
இப்போது வறுத்த முந்திரியை மாவுடன் சேர்த்து கலந்து விடவும். சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து பரிமாறவும். இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைக்கவும்.

 

மற்றுமொரு முறை :
அவல் பிடி கொழுக்கட்டை
பிடித்து வைத்தால் அது பிடி கொழுக்கட்டை.
இங்கு செய்முறை வெள்ளை அவல் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது தங்கள் விருப்பப்படி சிவப்பு அல்லது வெள்ளை அவள் பயன் படுத்தலாம்.
ஒரு கோப்பை அவல்
ஒரு கோப்பை வெல்லம்
அவலை லேசாக வறுத்து (3 நிமிடம்)

மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைத்து தேவைப்பட்டால் வடிகட்டி
கொள்ளவும்.
வறுத்து பொடித்த அவளில் சேர்த்து புட்டு பிசறுவது போல் பிசறிக்கொள்ளவும். தேவை பட்டால் தண்ணீர் சேர்த்து பிசறவும்
தேங்காய் துருவல் முந்திரி சேர்த்து பிடித்து ஆவியில் 5நிமிடம் வேகவைக்கவும்.

 

சைவ கோலா உருண்டை

சைவ கோலா உருண்டை:
கோலா உருண்டை என்றாலே அது அசைவத்தில் மட்டுமே செய்யமுடியும் என்பதை முற்றிலும் மாற்றும் வகையில் ஒரு அற்புத சுவை கொண்ட சைவ கோலா உருண்டை இது.
சோயா மீல் மேக்கர் கொண்டு சுவையான கோலா உருண்டை எளிதில் செய்துவிடலாம் ஈஸி ரெசிப்பி
இதை சாம்பார் சாதம், தயிர் சாதம் உடன் பரிமாறலாம், இதை தக்காளி சாஸுடன் அப்படியே பரிமாறலாம்.
ஊறவைத்து, அரைக்க, பொரிக்க, என இரண்டு பக்குவத்தை கையாண்டால் போதுமானது.
உங்கள் சுவை அரும்புகளை உற்சாகப்படுத்த இதோ செய்முறை

அரைக்க:
சோயா- மீல்மேக்கர் -1 கோப்பை
பச்சை மிளகாய்-4
தேங்காய்-1/4 கோப்பை
பூண்டு-4 பல்
இஞ்சி-2 அங்குலம்
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம்-1/2 தேக்கரண்டி
மிளகு-4
பட்டை,கிராம்பு,ஏலக்காய் அல்லாது கரம் மசாலா போடி-1/2 தேக்கரண்டி
பொட்டு கடலை-1/4 கோப்பை
முந்திரி பருப்பு-6
உப்பு-1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை-1 கைப்பிடி
செய்முறை:
மீல் மேக்கரை வெது வெதுப்பான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
முதலில் மசாலா பொருட்களை, மீல் மேக்கர் தவிர்த்து இதர பொருட்களை தண்ணீர் விடாமல் அரைத்து அதில் ஊறவைத்த மீள் மேக்கேரை நன்கு பிழிந்து இந்த மசாலா உடன் சேர்த்து பக்குவமாக அரைத்து கொள்ளவும். உப்பு சரி பார்த்துக்கொள்ளவும். இப்போது கலவை ரெடி.

கைகளில் எண்ணெய்தொட்டு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
வெடிப்பு இல்லாமல் நல்ல வழு, வழுப்பாக உருட்டவும் இல்லாவிடில் எண்ணெயில் கரைந்து விட வாய்ப்பு உள்ளது.
கடாயில் எண்ணெய் காயவைத்து, காய்ந்த எண்ணெயில் நிதானமான தீயில் பொன்னிறமாக பொறித்தேடுக்கவும்.

சுவையான சைவ கோலா ருண்டை ரெடி

குறிப்பு:
மீல் மேக்கர் தவிர்த்து, மற்ற அணைத்து மசாலா பொருட்களையும் வதக்கி ஆறவைத்தும் அரைக்கலாம். மிக எளிய முறையில் செய்வதற்கான முறையே மேலே கூறப்பட்டுள்ளது

அவல் அடை

அவல் அடை :
சாத்து மிகுந்த அவல் சமையல் முறையில் மிகக்குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது பொது வாக அவல் உப்புமா, மற்றும் இனிப்பு பதார்த்தங்களிலேயே சேர்க்கிறோம் சமையலில் ஒன்றிரண்டு என செய்வதுண்டு. அதுவும் வட மாநிலங்களில் போகா என்ற உப்மா வகை தினசரி உணவாக செய்வதுண்டு. கொஞ்சம் வித்தியாசமாக சமைக்க எண்ணுபவர்களுக்கு இது ஒரு சவாலே!!!
செய்யத்தேவையான பொருட்கள்:
அவல் -1 கோப்பை ஊறியது (1/2 கோப்பை ஊறவைக்காதது)தண்ணீர் வடித்து, நன்றாக பிழிந்து அரைக்க ஏதுவாக எடுத்துவைத்துக்கொள்ளவும்
அரிசி -1 கோப்பை
பூண்டு-4 பல்
சீரகம்-1/2 தேக்கரண்டி
வர மிளகாய்-2/3
உப்பு-1/2 தேக்கரண்டி
பொடிக்க: ஒன்றிரண்டாக பொடித்துக வைத்து கொள்ளவும்)
நிலக்கடலை-1/4 கோப்பை (வருத்தது )
பொட்டு கடலை -1/4 கோப்பை (வரு கடலை)
சிறிதாக வெட்டிவைத்துக்கொள்ளவும் :
வெங்காயம்-1
தக்காளி-1
கொத்தமல்லி இலை -1 மேஜைக்கரண்டி
செய்முறை:
‘சுத்தம் செய்து, ஊறவைத்த பச்சரிசி மற்றும் பூண்டு, சீரகம் உப்பு ஆகியவற்றை முதலில் அரைத்து பின்னர், அவல் சேர்த்து கெட்டியாக சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பொட்டு கடலை மற்றும் வேர்க்கடலையை சற்று கொரகொரப்பாக
அரைத்துக்கொள்ளவும்.
இரண்டையும் ஒன்றாக கலந்து, வெட்டிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.ஆடை மாவு பதத்திற்கு மாவை தயாராக வைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல்லை காயவைத்து அடை போல ஊற்றி மிதமான தீயில் நிதானமாக இரு புறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்து, தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.

வத்தல்குழம்பு பொடி / குழம்பு- vathal kuzhambu/podi

வத்தல்குழம்பு பொடி / குழம்பு :
வத்தல் குழம்பின் சுவை அதன் பொடி தயாரிப்பில் அமைந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வத்தல் குழம்பு என்றவுடன் நினைவிற்கு வருவது சுட்ட அப்பளம் பொருத்தமான சுவையாக இன்றும் விரும்பி சாப்பிடுகிறோம். காய்கறி, வெங்காயம் பூண்டு என எதுவும் சேர்க்காமலே எளிதில் சுவையான குழம்பு தயாரித்துவிடலாம். அதற்காக சத்துகுறைவென்று என்ன வேண்டாம் குழம்பில் சேர்க்கும் வத்தல் ஒரு சிறந்த மருத்துவகுணம் கொண்டது, பொடியில் சேர்க்கும் பருப்பு வகை, மிளகு ஜீரண சக்தியை தூண்டும்.
பொடியை தயாரித்துவைத்துக்கொண்டால் குழம்பு நிமிடங்களில் செய்து விடலாம்.எனவே இங்கு முதலில் பொ டி தயாரிக்கும் முறை கூறப்பட்டுள்ளது.

https://www.chettinadsnacksonline.com/collections/masala-podi/products/vathal-kara-kuzhambu-podi

Referrence: https://www.chettinadsnacksonline.com/products/vathal-kara-kuzhambu-podi


பொடி தயாரிக்க :
கடலை பருப்பு -1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1 மேஜைக்கரண்டி
வர மல்லி -1 1/2 மேஜைக்கரண்டி
மிளகாய் -10
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
வெந்தயம்-1/2 தேக்கரண்டி
பெருங்காயம்-1/2 தேக்கரண்டி
இவற்றை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

குழம்பு செய்யும்முறை:
நல்லெண்ணெய்- 2 மேஜைக்கரண்டி
கடலை பருப்பு- 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு -2 தேக்கரண்டி
வத்தல் (சுண்ட /மிளகு தக்களி வைத்தல் வத்தல்)
-1 மேஜைக்கரண்டி
உப்பு- 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
புளி சிறிய எலுமிச்சை அளவு எடுத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
வெல்லம் -1 தேக்கரண்டி

வானலியில் எண்ணெய் காயவைத்து பருப்பு வகைகளை போட்டு பொரிந்ததும், மஞ்சள்தூள் மற்றும் அரைத்துவைத்துள்ள குழம்பு பொடி 3 தேக்கரண்டி சேர்த்து மிதமான தீயில் 1/2 நிமிடம் வறுக்கவும், கறிவேப்பிலை சேர்த்து புளிக்கரைசல் நீரை ஊற்றவும், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து வரும் சமயம் உப்பு மற்றும் வெள்ளம் சேர்த்து தீயை குறைத்து வைக்கவும்.
எண்ணெய் மேலே வரும் (3 நிமிடம் ) சமயம் அடுப்பிலிருந்து பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும். இது இரண்டு முதல் 4 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.