வத்தல் சாதப்பொடி/Vathal Rice mix

வத்தல் சாதப்பொடி
சுண்ட வத்தல் மற்றும் மணத்தக்காளி வத்தல் சேர்த்து செய்யும் அற்புதமான, ஆச்சரியமூட்டும் சத்துக்கள் அடங்கிய சாதப்பொடி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகிட நம் முன்னோர்கள் பின்பற்றிய அற்புத சக்தி, இயற்க்கை உணவு வகை இந்த பொடி செய்வதும் சுலபம், சேர்க்கும் பொருட்களும் குறைவே. சாதாரணமாக வத்தல் குழம்பில் சேர்க்கும் பொது பெரும்பாலும் அதை அகற்றி விட்டே உட்கொள்கிறோம் வத்தலின் முழுமையான சத்து நமக்கு உள்ளே சேருவது இல்லை இதன் அருமை தெரியாமல் நாம் அதன் சுவை கருதி அகற்றி விடுகிறோம் ஆனால் இதன் உண்மையான சத்துக்கள் நாம் உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது சில குறிப்புகள் இங்கே,

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைத் தவிர, உயர்தர புரதங்கள், இதன் உணவு இழைகள் அடர்த்தியாக நிரம்பியுள்ளன. இது இயற்கையாகவே கார்ப்ஸ், கலோரிகள், கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது, இது எடை இழப்பு உணவுகளில் இணைவதற்கு ஏற்றதாக அமைகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது

இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது

நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது

மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது

இதய ஆரோக்கியம் தருகிறது

காய்ச்சலை திறம்பட எதிர்த்து நிற்கிறது

சிறுநீரக செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது

நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு சக்தியை கொடுக்கிறது.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சக்தியாகும். சூப்கள், கறி, பருப்பு போன்ற பல உணவுகளை சமைப்பதில் இதைப் பயன்படுத்தலாம், மேலும் உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் சுவையூட்டப்பட்ட உலர்ந்த வகையாகவும் உட்கொள்ளலாம். உங்கள் வழக்கமான உணவில் சேர்க்கவும், அது வழங்கும் அற்புதமான ஆரோக்கிய சலுகைகளை முழுமையாக பெறலாம்.

சாதப்பொடி :

பொடி வகையாக செய்யும் பொது உட்கொள்ளும் அளவு சற்று அதிகமாகும், முழுமையான சக்திகளையும் பெற உதவும் சற்று கசப்பு சுவைத்தான், எனினும் நெய்யோடு சேர்த்து உண்ணும் போது அதிகம் தெரியாது பாவற்காய் போன்றே இருக்கும், தேவைப்பட்டால் இங்கு குறிப்பிட்ட அளவிற்கு சற்று அதிகமாக பருப்பு சேர்த்துக்கொள்ளலாம் கசப்புத்தன்மையை குறைக்க உதவும். இதோ கீழே செய்முறை.
செய்யத்தேவையான பொருட்கள்:
சுண்ட வத்தல் – 50 கிராம் பக்குவமான முறையில் செய்த வத்தல் பெற்றி

Https://www.chettinadsnacksonline.com/collections/vathal/products/sundakkai-vathal

  • (மிளகு தக்காளி வத்தல்)-25 கிராம்
  • மணத்தக்காளி வத்தல்-25கிராம்
  • உளுத்தம் பருப்பு-50 கிராம்
  • மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்-3,4
  • மிளகு-1/2 தேக்கரண்டி
  • சீரகம் ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை ஒரு பிடி
  • பெருங்காயம்-1/4 தேக்கரண்டி
  • உப்பு சிறிது ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.
vatthal

செய்முறை:
வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்
பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம், வறுக்கவும் இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் வருத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடி யாக அரைத்துக்கொள்ளவும்.

சூடான சாதத் தோடு நெய்சேர்த்து கலந்து சாப்பிடவும், ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திடவும்.

https://youtu.be/0vlMSuWcISA

வேங்கரிசி மாவு/Vengarisi Mavu

வேங்கரிசி மாவு :
வேங்கரிசி மாவு அல்லது சத்து மாவு,
செட்டிநாட்டு வீடுகளில் இது முக்கியமாக வைத்திருப்பது பழக்கம், காரணம் இதன் சிறப்பு பயன்கள், இது அரிசி அல்லது நெல் (வெள்ளை அல்லது சிவப்பு) பக்குவமாக ஒரு கொதி வேகவைத்து, வெயிலில் காய வைத்து, பொரித்து அரைக்கப்படுவதால் இது வேங்கரிசி மாவு, பொரிமாவு அல்ல. இதை அப்படியே இனிப்பு அல்லது உப்பு சுவை சேர்த்து சாப்பிடலாம். முற்காலத்தில் கடல் கடந்து வணிகப் பயணம் செல்லும் சமயம் இதை முக்கியமாக கொண்டு செல்வதுண்டு.

இந்த மாவு பெற்றிட- https://www.chettinadsnacksonline.com/collections/flour-items/products/vengarisi-mavu?variant=36593994498209

பயன்கள்:

1.எளிதில் ஜீரணிக்க கூடியது,

2. சுலபமாக கலந்து சாப்பிட வசதியானது, சமைக்கத்தேவையில்லை

மோர் மற்றும் உப்பு அல்லது நெய் சர்க்கரை, தண்ணீர் கலந்தும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடலாம்.

3. பசி நிறைந்து திருப்தி தரக்கூடியது,

4. பல நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்

என பல நன்மைகள் நிறைந்தது என்பதால் இதை எல்லோரும் வீட்டில் வைத்திருப்பது உண்டு. மேலும் இது சமையலில் கெட்டித்தன்மை பெருவதற்காக சேர்ப்பதுண்டு பக்குவமாய் பொரித்து அரைப்பதால் நல்ல மணம் கொண்டது. செட்டிநாட்டு பகுதிகளில் வேங்கரிசி பொரிப்பதற்காகவே தனி ஆலைகள் உண்டு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவது உண்டு. அக்காலத்தில் இதுவே இன்றைய “நெஸ்டம்” காய்ச்சல், வயிற்று உபாதைகள் என பல சமயங்களில் இது கை கொடுக்கும் ஆகாரமாகும்.

இதே பக்குவத்தில் பெற்றிட சொடுக்கவும்.https://www.chettinadsnacksonline.com/collections/flour-items/products/vengarisi-mavu?variant=3659399449820

வீட்டில் வெண்ணை காய்ச்சினால் மணக்கும், ரொம்ப சந்தோசமாக இருக்கும் ஏன் தெரியுமா? நெய் காய்ச்சி எடுத்து விட்டு அதில் வேங்கரிசி மாவு, சர்க்கரை கலந்து எல்லோருக்கும் கொடுப்பார்கள் ரொம்ப சுவையாக இருக்கும், இன்றும் அதே சுவையில்…


தண்ணீர் சர்க்கரை சேர்த்து பிசைந்தது, சிவப்பரிசி வேங்கரிசி மாவு