வேங்கரிசி மாவு/Vengarisi Mavu

வேங்கரிசி மாவு :
வேங்கரிசி மாவு அல்லது சத்து மாவு,
செட்டிநாட்டு வீடுகளில் இது முக்கியமாக வைத்திருப்பது பழக்கம், காரணம் இதன் சிறப்பு பயன்கள், இது அரிசி அல்லது நெல் (வெள்ளை அல்லது சிவப்பு) பக்குவமாக ஒரு கொதி வேகவைத்து, வெயிலில் காய வைத்து, பொரித்து அரைக்கப்படுவதால் இது வேங்கரிசி மாவு, பொரிமாவு அல்ல. இதை அப்படியே இனிப்பு அல்லது உப்பு சுவை சேர்த்து சாப்பிடலாம். முற்காலத்தில் கடல் கடந்து வணிகப் பயணம் செல்லும் சமயம் இதை முக்கியமாக கொண்டு செல்வதுண்டு.

இந்த மாவு பெற்றிட- https://www.chettinadsnacksonline.com/collections/flour-items/products/vengarisi-mavu?variant=36593994498209

பயன்கள்:

1.எளிதில் ஜீரணிக்க கூடியது,

2. சுலபமாக கலந்து சாப்பிட வசதியானது, சமைக்கத்தேவையில்லை

மோர் மற்றும் உப்பு அல்லது நெய் சர்க்கரை, தண்ணீர் கலந்தும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடலாம்.

3. பசி நிறைந்து திருப்தி தரக்கூடியது,

4. பல நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்

என பல நன்மைகள் நிறைந்தது என்பதால் இதை எல்லோரும் வீட்டில் வைத்திருப்பது உண்டு. மேலும் இது சமையலில் கெட்டித்தன்மை பெருவதற்காக சேர்ப்பதுண்டு பக்குவமாய் பொரித்து அரைப்பதால் நல்ல மணம் கொண்டது. செட்டிநாட்டு பகுதிகளில் வேங்கரிசி பொரிப்பதற்காகவே தனி ஆலைகள் உண்டு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவது உண்டு. அக்காலத்தில் இதுவே இன்றைய “நெஸ்டம்” காய்ச்சல், வயிற்று உபாதைகள் என பல சமயங்களில் இது கை கொடுக்கும் ஆகாரமாகும்.

இதே பக்குவத்தில் பெற்றிட சொடுக்கவும்.https://www.chettinadsnacksonline.com/collections/flour-items/products/vengarisi-mavu?variant=3659399449820

வீட்டில் வெண்ணை காய்ச்சினால் மணக்கும், ரொம்ப சந்தோசமாக இருக்கும் ஏன் தெரியுமா? நெய் காய்ச்சி எடுத்து விட்டு அதில் வேங்கரிசி மாவு, சர்க்கரை கலந்து எல்லோருக்கும் கொடுப்பார்கள் ரொம்ப சுவையாக இருக்கும், இன்றும் அதே சுவையில்…


தண்ணீர் சர்க்கரை சேர்த்து பிசைந்தது, சிவப்பரிசி வேங்கரிசி மாவு