மீன் குழம்பு / Fish Kuzhambu

மீன் குழம்பு :
பக்குவமாய் சமைத்த மீன் குழம்பு நாவில் தேனூறவைக்கும். இரண்டு நாட்களுக்கு நாவில் சுவையும், கையில் மணமும் இதன் தனிச்சிறப்பு .
எந்த மீனாக இருந்தாலும் செய்முறை பக்குவம் ஒன்றுதான். அசத்தலான மீன்குழம்பு சுவைக்கு, பக்குவத்தை முறையாக பின்பற்றுதல் அவசியம் இல்லாவிட்டால் மீன் சுவை குழம்பில் சாராமலும், மீன் குழம்பில் கரைந்து முள் மிதப்பதும் சொதப்பிவிடும்.

மீன் குழம்புமீன் குழம்பு
மீன் குழம்பு

செய்யத்தேவையான பொருட்கள்:
மீன் சுத்தம் செய்தது 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 1/2 கோப்பை தோலுரித்துக்கொள்ளவும்
10 பல் -பூண்டு தோலுரித்துக்கொள்ளவும்
தக்காளி -2
கறிவேப்பிலை-1 கொத்து
உப்பு 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி

மிளகாய், மல்லிதூள் தனித்தனியாக சேர்க்கலாம் அல்லது செட்டிநாடு மிளகாய் பொடி சேர்க்கலாம்- 4 tsp

https://www.chettinadsnacksonline.com/collections/masala-podi/products/sambar-milagai-podi
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
மல்லித்தூள்-2 தேக்கரண்டி
புளிச்சாறு -3 மேஜைக்கரண்டி
தாளிதம் செய்ய:
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம் -1/4 தேக்கரண்டி
வெந்தயம் -1/4 தேக்கரண்டி
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
செய்முறை:
1. மீனை எலுமிச்சை சாறு, உப்பு சிறிது சேர்த்து நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும்.
2.பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
3.வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
4. வெங்காயம் பூண்டு சேர்த்து சிவந்து வரும் வரை வதக்கவும்.
5. பின்னர் தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தோல் விடும் வரை வதக்கவும்.
6.மிளகாய்த்தூள், மல்லித்தூள், புளிச்சாறு, தண்ணீர் 2 கோப்பை,சேர்த்து நன்கு 5 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
7.குழம்பு கெட்டியாக வரும் சமயம், சுத்தம் செய்த மீன் சேர்த்து மிதமான தீயில் 5 கொதிக்க விடவும்.
சுவையான மீன் குழம்பு தயார்.குறைந்தது 2 மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவை அற்புதமாக இருக்கும்.

மீன் குழம்பு
மீன் குழம்பு

குறிப்பு:‘சின்ன வெங்காயம் சிறிது சோம்பு, சீரகம், 1 சிறிய தக்காளி அரைத்து சேர்க்கலாம்.

தேங்காய்ப்பால் மீன் வறுவல்/ Fish Coconut milk Fry

தேங்காய்ப்பால் மீன் வறுவல் :
பழமையில் புதுமை காண்போம். அசைவப்பிரியர்களுக்கு கடல்வாழ் உயிரினம் மீன் வறுவல் அசத்தலான சுவை. வறுவல் என்றால் ஒரே ஒரு குறிப்பைத்தான் நாம் இதுவரை பின்பற்றி வந்தோம் இங்கு மீன் வறுவலில் சிறிய மாற்றுசுவையாக தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் முறை காண்போம். தேங்காய்பால் சேர்ப்பதால் மணம், சுவை ,மற்றும் மிருதுத்தன்மை அதிகமாகும். வறுக்கும்போதே அதன் மணம் நம் பசியை வெகுவாகத்தூண்டும். சும்மா அப்படியே சாப்பிடலாம்.

தேங்காய்ப்பால் மீன் வறுவல்
தேங்காய்ப்பால் மீன் வறுவல்

செய்யத்தேவையான பொருட்கள்:
மீன்- 500 கிராம்
மிளகாய் தூள் அல்லது பேஸ்ட்- 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு -1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது -1/2 தேக்கரண்டி
தேங்காய்ப்பால்- 1/2 கோப்பை
வறுத்தெடுக்க எண்ணெய்
செய்முறை:
மீனை நன்கு கழுவி நீரை நன்கு வடித்து எடுத்துக்கொள்ளவும்.
தேங்காய்ப்பால் மற்றும் வறுத்தெடுக்க எண்ணெய் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் மீனுடன் சேர்த்து நன்கு பிசறிவைக்கவும். பிரிஜில் 30 நிமிடம் வைத்து வெளியில் 1.30 மணி நேரம் வைத்து ஊற விடவும்.
வாயகன்ற கடாயில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் மீனை வறுக்கவும்.


முக்கால் பதம் வெந்ததும், ஓரம் சிவந்து வரும் சமயம் 1 மேஜைக்கரண்டி அளவு தேங்காய்ப்பால் சேர்த்து கவனமாக இருபுறமும் திருப்பி வேகவிடவும்.


தேவைக்கு ஏற்றார் போல் வருவலாகவோ, அல்லது சிறிது பால் சத்துடனோ எடுத்து  மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 

 

மீன் வறுவல்/ Fish fry

மீன் வறுவல் :

மீன் வறுவல் செய்வது சுலபம், செய்முறையும் எளிமையானது, கடைகளில் விற்கும் மசாலா பொடிகளை விட வீட்டிலேயே நொடியில் கலந்து மீனில் பிசறிவிடலாம். சில நிமிட கவனம், கலப்படமில்லாத மசாலா செய்து விடலாம்.

Meen varuval/Fish fry
Meen varuval/Fish fry

துண்டு மீன் 1/2 கிலோ, வறுவல் செய்ய தேவையான மசாலா பொடி இதோ,
தனி மிளகாய்ப்பொடி -3 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி
மைதா -1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா தூள்-1/2 தேக்கரண்டி
மேலே கூறியுள்ள அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன்,இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி,மற்றும் மசாலாவை கலந்து, மீனில் பிசறி வைக்கவும். 1/2 மணி நேரம்  பிரிட்ஜில் வைத்து, 1 1/2 மணி நேரம் வெளியில் எடுத்துவைத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் வறுத்தெடுக்கவும்.

img_3832

 

சுறா மீன் புட்டு / Sura Puttu

சுறா மீன் புட்டு :

For English please click:  chettinadcookbook.org/2015/04/13/sura-puttu/
சுறா, சிறப்பான மீன்களில் ஒன்றான சுறா மீனில் முட்கள் குறைவு, சதைப்பிடியான இந்த மீன் சுவையானது, பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்தது, மீன்புட்டு குழந்தைகள் மிகவும் விரும்பி உட்கொள்வர். குறிப்பாக இந்த புட்டு வகையில் முட்கள் அகற்றப்பட்டு, ஆவியில் அல்லது நீரில் வேகவைத்து சத்தாக சமைக்கபெற்றது. மிகவும் ஆரோக்கியமான இந்த மீன் புட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக சாப்பிடலாம். சப்பாத்தி, சாதம் இரண்டுக்கும் பொருத்தமானது.

சுறா மீன் புட்டு / Sura Puttu
சுறா மீன் புட்டு / Sura Puttu

செய்யத்தேவையான பொருட்கள்:
சுறா மீன்-1/2 கிலோ
உப்பு 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
வெங்காயம் 1 பெரியது, அதிகம் சேர்க்க இன்னும் சுவை கூடும்
இஞ்சி-2 அங்குலம் பொடியாக நறுக்கியது
எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
பச்சைமிளகாய் -2
கறிவேப்பிலை 2 கொத்து                                                                                                         சீரகம் தாளிக்க
செய்முறை:
1. மீனை கழுவி, கொதிக்கும் நீரில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
2. வேகவைத்த மீனை தோல் உரித்து, முள் நீக்கி வைத்துக்கொள்ளவும்.
3. பின்னர் அதை ஒன்றிரண்டாக உதிர்த்து தயாராக வைக்கவும்.
4. வெங்காயம், பச்சைமிளகாய்,,இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

12071752_1052574061450870_1267068241_n5. வாணலியில் எண்ணெய் காய வைத்து வும்.
6. பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
7. நன்கு வதங்கியதும், கறிவேப்பிலை,உதிர்த்த மீன், மிளகாய்த்தூள், உப்பு, மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும், மூடி போட்டு 3 நிமிடம் மூடி வைக்கவும். இடையிடையே கிளறிவிடவும்.

12834547_1052574088117534_1734823490_n
8. நன்கு ஒன்றுசேர்ந்து 5 நிமிடம் வரை வதங்கியதும் சப்பாத்தியுடனோ, சூடான சாதத்ததுடனோ பரிமாறலாம்.

11637963_1052574051450871_1887432251_n
9 சுவையும் மனமும் பசியைத்தூண்டும்.