கொள்ளு துகையல்/Horse gram chutney

உடல் எடை குறைக்கும் கொள்ளு
கொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு.
ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.

புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.
புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு.

பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே,
சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.
வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.

கொள்ளு துகையல் செய்யும் முறை:
கொள்ளு 1/4 கப்
துவரம் பருப்பு 1 தேக்கரண்டி
வர மிளகாய் 2
மிளகு- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
தேங்காய் -2 மேஜைக்கரண்டி
பூண்டு- 2 பல்
உப்பு -1/2 தேக்கரண்டி, புளி


செய்முறை:
வாணலியில் என்னை விட்டு கொள்ளு வறுத்துக்கொள்ளவும்
நிறம்மாறும் வரை வறுத்து,எடுத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, துவரம்பருப்பு சேர்த்து
பொன்னிறமாக வரும் போது , மிளகு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய்,
புளி மற்றும் உப்பு சேர்த்து இறக்கவும்.
இந்த கலவையை வறுத்து வைத்துள்ள கொள்ளு பருப்புடன் சேர்த்து
அரைத்து எடுக்கவும்,சுவையான மனமும், நற்குணமும் நிறைந்த
கொள்ளு துகையல் ரெடி
இது சூடான சாதம், தோசை அனைத்திற்கும் ஏற்றது.

அவசர துவையல் / Instant chutney

அவசர துவையல் :

For English please click:   http://wp.me/p1o34t-E6

Rosappu Thovayal:   http://wp.me/p1o34t-Et
சில சமயம் நாம் எளிதாக, அவசரமாக சிலமணித்துளிகளில் சமைத்து பசியாற விரும்புவோம். அச்சமயம் என்ன செய்வது என்ற குழப்பம் வெகுவாக இருக்கும், இதுபோன்ற சுலபமான குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ளவும் தேவையான பொருட்களும் குறைவும். இந்த துவையல் இட்லி, தோசை, சாதம் எல்லாவற்றிர்கும் ஏற்றது. மனமும் சுவையும் உங்களை மகிழச்செய்யும். இந்த மூன்று அவசர தொவையலுமே மிகவும் வித்யாசமானது.

1.தேங்காய் துவையல் :

தேவையான பொருட்கள்:
தேங்காய்-1 மூடி
உப்பு-1/2
புளி
வரமிளகாய் -4
தாளிக்க:
எண்ணெய் -1தே .க
கடுகு-1 தே .க
உளுந்தம்பருப்பு -1 தே .க
பெரும்காயம் -1/2 தே .க
கறிவேப்பிலை-2 கொத்து
செய்முறை:
1. கடாயில் என்னை காய வைத்து மேலே குறிப்பிட்டுள்ள தாளிக்க பொருட்களை தாளித்து கறிவேப்பிலை சேர்த்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
2.தேங்காய், உப்பு, புளி ,வரமிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும், பிறகு தாளித்த பொருட்களை சேர்த்து 1 நொடி அரைத்து எடுக்கவும். அதிகம் அரைத்தால் சுவை மாறிவிடும் ஆகையால் தளித்த பொருட்களை கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அவசர துவையல் தயார்.

2. தேங்காய் ,வெங்காயம் பூண்டு துவையல் :
இது மிகவும் சுலபமானது வெள்ளை வெளேர் என்றிருக்கும். பச்சையாக அரைத்ததும் சாப்பிடலாம்.இந்தக்கலவை மிகவும் சுவையானது.

Avasara thoval
தேவயான பொருட்கள் :
தேங்காய் 1 மூடி
பச்சை மிளகாய்-3
உப்பு-1/2 தே .க
புளி – 1 சொலை
சின்ன வெங்காயம்- 4
பூண்டு-2
எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும், தேவைப்பட்டால் கடுகு தாளித்து பரிமாறலாம்.

3. ரோசாப்பூ துவையல் :
இதன் பெயர் காரணம் அழகான ரோசப்பூவின் நிறத்தை கொண்டுடயதால் இது ரோசாப்பூ துவையல் என்று அழைக்கப்பெற்றது.பச்சை வெங்காயத்தின் நிறமும், தக்காளி, வரமிளகாயின் நிறமும் அப்படியே அரைப்பதால் அதன் நிறம் ஒன்று சேர்ந்து ரோசப்பூவின் நிரத்தைக்கொண்டிருப்பதலோ என்னவோ! இது ரோசாப்பூ தொவையல் ஆயிற்று. இது அம்மியில் அரைத்து தயாரிக்கும் முறையாகவே நான் என் தாயாரிடம் கற்றுக்கொண்டேன், இப்போதைய சூழ்நிலைக்கு அது கண்டிப்பாக சாத்தியம் இல்லை ஆகவே மிக்சியிலும் சுவைமாறது செய்யலாம்.

Rosappu Thovayal
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்-20
தக்காளி-1 சிறியது
பூண்டு-4
உப்பு-1/2 தே .க
வரமிளகாய்-4
செய்முறை:
எல்லா பொருட்களையும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
ரோசாப்பூ துவையல் ரெடி .
வெங்காயம், பூண்டு,பச்சை வாடை பிடிக்காதவர்கள் தாளிதம் செய்து உண்ணலாம்.
இது தோசை, இட்லி, ஆப்பம் ஆகியவற்றிற்கு ஏற்றது.

DSC09579

 

மிளகாய் துவையல் / Red chilli chutney

மிளகாய் துவையல் :
கவர்ச்சிகரமான வண்ணக்கலவை, மல்லிகைப்பூ இட்டலியும் காரசாரமான மிளகாய் துவையலும் ஈடில்லா இணையாகும். எளிதாக இருந்தாலும் சுவையோ அலாதி. மிளகாய் துவையல் இட்டலி தோசை, உத்தப்பம் போன்றவற்றிற்கு இணையாகும் .

மிளகாய் துவையல்
மிளகாய் துவையல்

தேவையான பொருட்கள் :
வரமிளகாய்-5 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
வெங்காயம் -1 பெரியது
சிவப்பு தக்காளி-1 பெரியது
புளி சிறிது, தேவைப்பட்டால் பூண்டு 5 பல் சேர்த்துகொள்ளலாம்
உப்பு-1/2 தேக்கரண்டி
தளிக்க:
எண்ணெய் -3 தேக்கரண்டி
கடுகு-1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு-1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் -1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை :
1. வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
2. தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
3. வெங்காயம், தக்காளி, உப்பு, புளி, மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைக்கவும். குறிப்பு : மற்றொரு விதம் இந்தக்கலவையை வதக்கியும் அரைக்கலாம்.
4. வானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். கறிவேப்பிலை, அரைத்த துவயலையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
5. சுவையான காரசாரமான மிளகய்த்துவயல் தயார். இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.

11910641_941450342563243_1275661493_n

குறிப்பு: மற்றொரு விதம் இந்தக்கலவையை வதக்கியும் அரைக்கலாம்.