கறிவேப்பிலை காம்பு சூப் :
Recipe in English English version of this recipe
கறிகளில் பயன்படுத்தப்படும் வேப்பிலை. அற்புத சுவையும் மனமும் கொண்ட இந்த இலை வகை பெரும்பாலான இந்திய உணவுகளில் முக்கிய இடம் கொண்டுள்ளது. இதில் அளவிற்கு அதிகமான மருத்துவ குணம் கொண்டது நம் உடம்பில் முடி முதல் கால் வரை அணைத்து உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
பொதுவாக இந்த இலையை மட்டுமே சமையலில் பயன்படுத்துவது உண்டு காம்பை களைந்து குப்பையில் போட்டு விடுகிறோம் காரணம் ஒன்று, அதன் மகத்துவம் அறிவதில்லை மற்றொன்று சமையலில் இதன் பக்குவ முறை குறைவு என்பதே உண்மை.
இங்கு அதன் பயனில் ஒரு அருமையான சூப் செய்து பயன்பெறுவோம்.
இதன் சுவை கிட்டத்தட்ட மட்டன் எலும்பு சூப் போன்ற சுவை கொண்டது இதன் தனிச்சிறப்பு.
செய்முறை:
கறிவேப்பிலை அதன் காம்போடு ஒன்றிரண்டாக வெட்டியது-10 இருந்து 15 வரை
துவரம்பருப்பு-2 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி-1/4
சிறிய வெங்காயம்-3
பூண்டு-2 பல்
தக்காளி-1 சிறியது
இவை அனைத்தையும் 2 டம்ளர் தண்ணீரில் நன்கு 4 or 5 விசில் வரை வேகவிடவும்.
ஆறியதும் மத்தால் நன்கு கடைந்து சாரிரக்கவும்
வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
தாளிக்க:
வெண்ணை-1/2 தேக்கரண்டி
சோம்பு/ சீரகம்-1/4 தேக்கரண்டி
மிளகு-3
வாணலியில் வெண்ணை சேர்த்து தாளிதம் செய்யவும், சிறிது கரம் மசால் பொடி-1 சிட்டிகை சேர்த்துக்கொள்ளலாம்.
சூப் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
எலுமிச்சை சாறு 1/2 தேக்கரண்டி சேர்க்கவும், மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.
மேலும் சுவை கூட்ட:
மல்லி விதை-1 தேக்கரண்டி,
மிளகு-5,
சீரகம்-1/2 தேக்கரண்டி
1 பல் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து சேர்த்து சூப்போடு கலந்து கொதிக்க விடவும். வறுக்காமலே அரைக்கலாம்