வத்தல் சாதப்பொடி/Vathal Rice mix

வத்தல் சாதப்பொடி
சுண்ட வத்தல் மற்றும் மணத்தக்காளி வத்தல் சேர்த்து செய்யும் அற்புதமான, ஆச்சரியமூட்டும் சத்துக்கள் அடங்கிய சாதப்பொடி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகிட நம் முன்னோர்கள் பின்பற்றிய அற்புத சக்தி, இயற்க்கை உணவு வகை இந்த பொடி செய்வதும் சுலபம், சேர்க்கும் பொருட்களும் குறைவே. சாதாரணமாக வத்தல் குழம்பில் சேர்க்கும் பொது பெரும்பாலும் அதை அகற்றி விட்டே உட்கொள்கிறோம் வத்தலின் முழுமையான சத்து நமக்கு உள்ளே சேருவது இல்லை இதன் அருமை தெரியாமல் நாம் அதன் சுவை கருதி அகற்றி விடுகிறோம் ஆனால் இதன் உண்மையான சத்துக்கள் நாம் உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது சில குறிப்புகள் இங்கே,

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைத் தவிர, உயர்தர புரதங்கள், இதன் உணவு இழைகள் அடர்த்தியாக நிரம்பியுள்ளன. இது இயற்கையாகவே கார்ப்ஸ், கலோரிகள், கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது, இது எடை இழப்பு உணவுகளில் இணைவதற்கு ஏற்றதாக அமைகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது

இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது

நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது

மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது

இதய ஆரோக்கியம் தருகிறது

காய்ச்சலை திறம்பட எதிர்த்து நிற்கிறது

சிறுநீரக செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது

நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு சக்தியை கொடுக்கிறது.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சக்தியாகும். சூப்கள், கறி, பருப்பு போன்ற பல உணவுகளை சமைப்பதில் இதைப் பயன்படுத்தலாம், மேலும் உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் சுவையூட்டப்பட்ட உலர்ந்த வகையாகவும் உட்கொள்ளலாம். உங்கள் வழக்கமான உணவில் சேர்க்கவும், அது வழங்கும் அற்புதமான ஆரோக்கிய சலுகைகளை முழுமையாக பெறலாம்.

சாதப்பொடி :

பொடி வகையாக செய்யும் பொது உட்கொள்ளும் அளவு சற்று அதிகமாகும், முழுமையான சக்திகளையும் பெற உதவும் சற்று கசப்பு சுவைத்தான், எனினும் நெய்யோடு சேர்த்து உண்ணும் போது அதிகம் தெரியாது பாவற்காய் போன்றே இருக்கும், தேவைப்பட்டால் இங்கு குறிப்பிட்ட அளவிற்கு சற்று அதிகமாக பருப்பு சேர்த்துக்கொள்ளலாம் கசப்புத்தன்மையை குறைக்க உதவும். இதோ கீழே செய்முறை.
செய்யத்தேவையான பொருட்கள்:
சுண்ட வத்தல் – 50 கிராம் பக்குவமான முறையில் செய்த வத்தல் பெற்றி

Https://www.chettinadsnacksonline.com/collections/vathal/products/sundakkai-vathal

  • (மிளகு தக்காளி வத்தல்)-25 கிராம்
  • மணத்தக்காளி வத்தல்-25கிராம்
  • உளுத்தம் பருப்பு-50 கிராம்
  • மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்-3,4
  • மிளகு-1/2 தேக்கரண்டி
  • சீரகம் ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை ஒரு பிடி
  • பெருங்காயம்-1/4 தேக்கரண்டி
  • உப்பு சிறிது ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.
vatthal

செய்முறை:
வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்
பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம், வறுக்கவும் இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் வருத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடி யாக அரைத்துக்கொள்ளவும்.

சூடான சாதத் தோடு நெய்சேர்த்து கலந்து சாப்பிடவும், ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திடவும்.

https://youtu.be/0vlMSuWcISA

தேங்காய் சாதம் / Coconut fried rice

தேங்காய் சாதம் :
உடனடி தயாரிப்பில் மிக எளிமையாகவும், குறுகிய நேரத்தில் சுவையாக மற்றும் ஆரோக்கியமாகவும் இந்த தேங்காய் சாதம் தயாரித்து விடலாம். தேங்காய் தேகத்துக்கு மிகவும் நன்மை தரக்கூடியது, தோல் மெருகேற்றவும், வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறவும் உதவுகிறது.

தேங்காய் சாதம் / Coconut fried rice
தேங்காய் சாதம் / Coconut fried rice

செய்யத்தேவையான பொருட்கள் :
வடித்த சாதம் 2 கோப்பை
தேங்காய் துருவியது – 1 கோப்பை
உப்பு-1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு-1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு -1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை- 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு- 2 தேக்கரண்டி
வர மிளகாய்-3
கறிவேப்பிலை
செய்முறை:
1. ஒரு கோப்பை அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து, பாதி தேங்காய் பால், பாதி தண்ணீர், உப்பு சேர்த்து சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். விருப்பத்திற்கு ஏற்ப
(தேங்காய்ப்பால் சேர்க்காமல் வெறும் தண்ணீரிலும் வடிக்கலாம்)
2. வடித்த சாதத்தை ஆறவைக்கவும். இது கிளறும்போது சாதம் உடைந்துவிடாமல் இருக்க உதவும்.
3. வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, வரமிளகாய் தாளிதம் செய்யவும்.
4.முதலில் வேர்க்கடலை, பிறகு, கடலைப்பருப்பு, முந்திரி, உளுத்தம்பருப்பு, என ஒன்றொன்றாக சேர்த்து வறுக்கவும்.
5. பிறகு கறிவேப்பிலை, தேங்காய், மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்.(தேங்காய் அதிகநேரம் வதக்கினால் எண்ணெய் வாடை வரும் கவனம் தேவை)
6. வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.


சுவையும் மனமும் நிறைந்த தேங்காய் சாதம்  நொடியில் தயார்

வரகு அரிசி தயிர் கலவை / Kodo millet curd rice

வரகு அரிசி தயிர் கலவை : “செய்வதை திருந்தச்செய் சேரிடம் அறிந்து சேர்”, என்ற பொன்மொழிக்கு ஏற்ப சுலபமான தயிர் சதமாக இருந்தாலும் அதை அதிக அக்கறையோடு, சுவைகூடும் வண்ணம் செய்து அசத்துவது தனிக்கலை, அது சேருமிடத்தில் பெருமையும் கூடும்.
வெகுவாகவும், பிரபலமாகவும், பரவி வரும் சிறுதானிய உணவு, அனைத்து வயதினருக்கும் பயனளிக்கக்கூடியது. அற்புத சுவையும், ரகசியமான ஆரோக்கியமும் நிறைந்து காணப்படும் இந்த சிறு தானய வகைகள், பல ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர் அதன் தோற்றம் மீண்டும் அறியவந்துள்ளது. இது ஒரு பொக்கிஷமான பயிரக கருதப்பட்டு வந்தது.
அரிசியுடன் ஒப்பிடும் போது சிறு தானியங்களில் வரகு உயர்வானதாக கருதப்படுகிறது. சிறு தானியங்கள் அனைத்துமே உடலுக்கு மிகவும் அருமையானது
வரகு அரிசி புரதம், கால்சியம் , நார்ச்சத்து மற்றும் கனிமங்கள்(மினரல்ஸ்) உயர் ஆதாரமாக உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவும். வரகு அரிசியின் சத்தோடு நாம் சேர்க்கும் மாதுளம் முத்துக்கள், தயிர் ஜீரணத்திற்கு ஆதாரமான பெருங்காயம், சீரகம், சுவையை அதிகரிக்க பால், உப்பு சேர்ந்த கலவை சுவையும் மனமும் நிறைந்த ஒரு முழு உணவாக பரிமாறலாம்.

அரிசியை பிரிய மனமில்லையா!!! கவலை வேண்டாம் சுவையும் சத்தும் மிகவும் அதிகம், செய்வதும் சுலபமானது ,   பக்கவிளைவுகள் இல்லை தைரியமாக சமைக்கலாம்.

வரகு அரிசி தயிர் கலவை / Kodo millet curd rice
வரகு அரிசி தயிர் கலவை / Kodo millet curd rice

தேவையான பொருட்கள்
வரகு அரிசி-1/2 கோப்பை
தண்ணீர்-1 1/2 கோப்பை
உப்பு-1/2 தேக்கரண்டி
பால்-1/2 கோப்பை தயிர்-1/4 கோப்பை
மாதுளம் பழம் முத்துக்கள் -2 மேஜைக்கரண்டி
இஞ்சி பொடியாக நறுக்கியது-1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்-2 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை-1 கோது
கொத்தமல்லி இல்லை- சிறிது

11914203_945417312166546_731861243_n
தாளிக்க:
எண்ணெய் -2 தேக்கரண்டி
பெருங்காயம் சிறிது
கடுகு-1 தேக்கரண்டி
சீரகம்-1/4 தேக்கரண்டி
செய்முறை:
வரகு அரிசியை நன்கு கழுவி, நீர் சேர்த்து மென்மையாக வேகவைக்கவும்.
பின்னர் சிறிது ஆற வைக்கவும் பிறகு, பால் தயிர் உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு தாளிதம் செய்து இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பிசைந்த வரகு தயிர் கலவையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
மாதுளம் முத்துக்கள் கொத்தமல்லி இல்லை சேர்த்து பரிமாறவும்.