கருப்பு உளுந்தங்களி: To read Recipe in English click the link here– https://wp.me/p1o34t-1Hd
இதை ஏன் நாம் களி என்கிறோம்?
மென்மையான விழுது போன்றது வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும் இனிப்பு சுவை கொண்டது எளிதில் ஜீரணிக்கக்கூடியது இந்த களி வகை உணவு பதார்த்தங்கள்.
அந்த வகையில் கருப்புளுந்து களி சுவை மட்டுமல்லாமல் எலும்பு மற்றும் உடலுக்கு பல விதங்களில் அதிக பலம் கொண்டது குறிப்பாக பெண்கள் பூப்படையும் சமயத்தில் இதை நல்லெண்ணெயில் செய்து உட்கொள்வது மிகச்சிறப்பு வாய்ந்தது, எலும்புக்கும், கருப்பைக்கு உறுதியளிக்க வல்லது கருப்பட்டியில் செய்வதால் இரும்புசத்து மிகுந்து ரத்தப்போக்கை சீர்செய்யவல்லது.
செய்யத்தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து-1 கோப்பை
பச்சரிசி-1 மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் -2 மேஜைக்கரண்டி (நெய் 1 மேஜைக்கரண்டி சுவை சேர்க்க)
கருப்பட்டி-1/2 கோப்பை
வெல்லம் -1/4 கோப்பை
(கருப்பட்டி மட்டும் சேர்த்தும் செய்யலாம் )
செய்முறை:
முதலில் உளுந்தை மனம் வரும் வரை வருத்துக்கொள்ளவும், அரிசியையும் வருத்து இரண்டையும் சேர்த்து நல்ல மென்மையான மாவாக பொடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, கருப்பட்டி, வெல்லம் சேர்த்து 1 கோப்பை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும் கொதிக்கும் சமயம் இறக்கி வடிகட்டி சிறிது ஆறவைத்துக்கொள்ளவும். (இப்படி செய்யும் போது மாவு கட்டி தட்டாமல் இருக்கும்)
வைத்துள்ள வெல்லப்பாகில் மாவை சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து பின்னர் அடுப்பில் இளந்தீயில் வைத்து கிளரவும்.
இடை இடையே நல்லெண்ணெய் சேர்த்து கட்டி தட்டாமல் களி பக்குவத்திற்கு வரும் வரை கிளறி இறக்கவும்
வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் சமயம் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையும் மனமும் சிறப்பாக இருக்கும்.
குறிப்பு:
நல்லெண்ணெய் செக்கு எண்ணெய் நல்லது, கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்தும் செய்யலாம் கருப்பு உளுந்து இன்னும் சிறப்பு.
இந்த மாவை வருத்து, அரைத்து, சலித்து, வைத்துக்கொண்டு தேவைப்படும் சமயம் களி செய்யலாம்.
கும்மாயம் மாவு செட்டிநாட்டு பக்குவத்தில் பெற கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்,