கருப்பு உளுந்தங்களி

கருப்பு உளுந்தங்களி: To read Recipe in English click the link herehttps://wp.me/p1o34t-1Hd
இதை ஏன் நாம் களி என்கிறோம்?
மென்மையான விழுது போன்றது வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும் இனிப்பு சுவை கொண்டது எளிதில் ஜீரணிக்கக்கூடியது இந்த களி வகை உணவு பதார்த்தங்கள்.
அந்த வகையில் கருப்புளுந்து களி சுவை மட்டுமல்லாமல் எலும்பு மற்றும் உடலுக்கு பல விதங்களில் அதிக பலம் கொண்டது குறிப்பாக பெண்கள் பூப்படையும் சமயத்தில் இதை நல்லெண்ணெயில் செய்து உட்கொள்வது மிகச்சிறப்பு வாய்ந்தது, எலும்புக்கும், கருப்பைக்கு உறுதியளிக்க வல்லது கருப்பட்டியில் செய்வதால் இரும்புசத்து மிகுந்து ரத்தப்போக்கை சீர்செய்யவல்லது.


செய்யத்தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து-1 கோப்பை
பச்சரிசி-1 மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் -2 மேஜைக்கரண்டி (நெய் 1 மேஜைக்கரண்டி சுவை சேர்க்க)
கருப்பட்டி-1/2 கோப்பை
வெல்லம் -1/4 கோப்பை
(கருப்பட்டி மட்டும் சேர்த்தும் செய்யலாம் )
செய்முறை:
முதலில் உளுந்தை மனம் வரும் வரை வருத்துக்கொள்ளவும், அரிசியையும் வருத்து இரண்டையும் சேர்த்து நல்ல மென்மையான மாவாக பொடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, கருப்பட்டி, வெல்லம் சேர்த்து 1 கோப்பை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும் கொதிக்கும் சமயம் இறக்கி வடிகட்டி சிறிது ஆறவைத்துக்கொள்ளவும். (இப்படி செய்யும் போது மாவு கட்டி தட்டாமல் இருக்கும்)
வைத்துள்ள வெல்லப்பாகில் மாவை சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து பின்னர் அடுப்பில் இளந்தீயில் வைத்து கிளரவும்.
இடை இடையே நல்லெண்ணெய் சேர்த்து கட்டி தட்டாமல் களி பக்குவத்திற்கு வரும் வரை கிளறி இறக்கவும்
வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் சமயம் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையும் மனமும் சிறப்பாக இருக்கும்.
குறிப்பு:
நல்லெண்ணெய் செக்கு எண்ணெய் நல்லது, கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்தும் செய்யலாம் கருப்பு உளுந்து இன்னும் சிறப்பு.
இந்த மாவை வருத்து, அரைத்து, சலித்து, வைத்துக்கொண்டு தேவைப்படும் சமயம் களி செய்யலாம்.
கும்மாயம் மாவு செட்டிநாட்டு பக்குவத்தில் பெற கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்,

கேழ்வரகு/ராகி அல்வா/Ragi Halwa

கேழ்வரகு/ராகி அல்வா :


கேழ்வரகு சிறப்பு அறிவோம்

கேழ்வரகு உண்பதால் ஏற்படும் நன்மைகள்


ஊட்ட உணவு கேழ்வரகில் “புரதம், நார்ச்சத்து, மக்னிசியும்” போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. விரைவில் உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். கேழ்வரகில் இருக்கும் “ட்ரிப்டோபான்” எனப்படும் பொருள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.
உடல் சூடு மனிதர்களின் உடல் எப்போதும் சராசரியான உடல் வெப்பத்தை கொண்டிருக்க வேண்டும். கோடை காலங்களில் எல்லா மனிதர்களுக்கும் உடல் சூடு அதிகரித்து, அதிகம் வியர்த்து உடலின் சில அத்தியாவசிய சத்துக்கள் வியர்வை வழியாக வெளியேறிவிடுகிறது.கேழ்வரகு கூழ், களி போன்றவற்றை சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்யும்.
பதற்றம், மனஅழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. கேழ்வரகில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்
தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். தோல் பளபளப்பு பெற்று இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது.

Halwa:
கேழ்வரகில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
கேழ்வரகு அல்வா மிக்க சுவையான பல சிறப்பு அம்சம் கொண்ட அல்வா அதிக நெய் இல்லாமல் தேங்காய்ப்பாலின் சுவையும் மனமும் கலந்த ஒரு இனிப்பு வகை வெல்லம் சேர்த்து செய்வதால் இன்னும் இரும்புச்சத்து அதிகமாக கொண்டது சுவை தைரியமாக செய்து அசத்துங்கள்.


பொருட்கள்:
கேழ்வரகு மாவு-1 கோப்பை
தேங்காய் பால் -1 கோப்பை கெட்டியாக
தண்ணீர்-2 கோப்பை (இரண்டு பால் ஒரு பங்கு தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்)
வெல்லம்-1 1/4 கோப்பை
நெய்-2 மேஜைக்கரண்டி
முந்திரி- 10
செய்யும் முறை :
கேழ்வரகு மாவை 1 மணி நேரம் இரண்டு கோப்பை தண்ணீரில் ஊறவைத்து, மெல்லிய துணியால் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். (ராகி பால் )


வானலியில் 1 மேஜை கரண்டி நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
கெட்டியான தேங்காய் பால் மற்றும் கேழ்வரகு மாவை ஒன்றாக கலந்து அதே வானலில் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். தீ மிதமானதாக வைத்து கை விடாமல் கிளறவும்.


நல்ல கெட்டியாக வரும் சமயம் வெல்லம் சேர்த்து கிளறவும். (வெல்ல ம் 1/4 கோப்பை நீரில் அடுப்பில் வைத்து கரைத்தும் சேர்க்கலாம்).


இடையில் நெய் சேர்த்து நன்கு கிளறவும் 10 நிமிடம் வரை அப்படியே கிளறவும், கண்ணாடி போல் நன்கு அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, வறுத்த முந்திரிபருப்பு தூவி பரிமாறவும்.


தேங்காய் பாலோடு சேர்த்து கிண்டுவதால் நல்ல தேங்காய் பால் மனம் அசத்தலாக இருக்கும் நெய்யும் குறைவாகவே சேர்க்கலாம்.

 

 

கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa

கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa:

கவுனி அரிசி: https://www.chettinadsnacksonline.com/collections/flour-items/products/chettinad-kavuni-rice-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF

செட்டிநாட்டு சிறப்பு மிக்க கவுனிஅரிசி இப்போது அல்வா சுவையோடு உங்கள் விருந்து சிறக்க, நா சுவைக்க.

சத்து நிறைந்த கவுனி அரிசி உடல் சூட்டை தவிர்ப்பதோடு, நார் சத்து மிகுதியானதால் மலசிக்கல் விலகும். கருப்பு அரிசி ஒரு பசையம் இல்லாத தானியமாகும். ஒவ்வாமை மற்றும் செலியக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்ல மாற்றாகும்.
உடலில் உள்ள குளுக்கோஸ் உறிஞ்சுதலில் உதவுகிறது, இந்த அரிசி தவிடு நிறைந்த நார்சத்து கொண்டிருக்கும், நீரிழிவு நோயை சமாளிக்க உதவுகிறது. இது வகை 2 நீரிழிவு ஆபத்தை குறைக்கிறது.

கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa:
கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa:

செய்யத்தேவையான பொருட்கள் :
கவுனி அரிசி -1 கோப்பை
சீனி – 1 1/4 கோப்பை
ஏலக்காய் -3
நெய் – 1/2 கோப்பை
முந்திரி 10
திராட்சை 1 மேஜைக்கரண்டி
கவுனி அரிசியை நன்கு ஊறவைத்து நல்ல விழுதாக அரைத்துக்கொள்ளவும்.


வானலியில் சிறிது நெய் காய வைத்து , முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அதே வானலியில் அரைத்த கவுனிஅரிசி, தண்ணீர் 2 கோப்பை சேர்த்து கிளறவும்

கெட்டியான பிறகு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விடவும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.


நன்கு திரண்டு, உருண்டு வரும் சமயம் முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.


நெய்விட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயம் அடுப்பை விட்டு இறக்கி ஆறவிடவும்.
சூடான கவுனிஅரிசி ஆல்வா தயார்.

சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack

சிறுதானிய பொரி உருண்டை:

சிறு தானியம் ஒரு பிரபலமான உணவாக பெருகிவரும் இக்காலத்தில் அதன் பல்வேறு செய்முறைகளும் பகிரக்காண்கிறோம் அந்த வகையில், இது ஒரு வித்யாசமான பயனுள்ள குறிப்பாக இங்கு பதிவிடுகிறேன். சிறு தானியத்தை பொரியாக்கி, பொரியை மாவாக்கி, நெய், சர்க்கரை சேர்த்து உருண்டையாக்கி சத்து நிறைந்த ஒரு தின்பண்டமாக குடும்பத்தோடு சுவைத்து மகிழ்வீர்.

பிள்ளையார் நோம்புக்கு பொரித்த பொரி என்னசெய்வது? வீணாக்காமல் செய்தால் பிரமாதமான சுவையோடு சத்தான பொரி மாவுருண்டை

சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack
சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snackசிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack

செய்முறை:
கம்பு -100கிராம்
சோளம் -100கிராம்
அவல் -100கிராம்
தினை -100கிராம்
வரகு -100கிராம்
நெய்-250 அல்லது 300 மில்லி
வெல்லம் / சர்க்கரை -300 கிராம் மாவாக பொடித்துக்கொள்ளவும்
கம்பு, சோளம் தினை,வரகு, அவல் இவற்றை தனித்தனியாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.


மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும்,
பொடித்த சர்க்கரையை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.


நெய்யை சூடு பண்ணி, கலந்த மாவை சேர்த்து இளம் சூட்டில் கிளறவும்.

கை பொறுக்கும் சூடு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சிறு உருண்டைகளாக உருட்டவும்
சிறுதானிய பொரி உருண்டை தயார்

சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack
சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack

 

திரட்டுப்பால்/ Therattupaal

திரட்டுப்பால் :
பிள்ளையார் நோம்பு ஸ்பெஷல் திரட்டுப்பால், சுண்டிய பாலில் கருப்பட்டி அல்லது வெல்லம், உடன் பொறுமையும் சேர்த்தால் சுவையான திரட்டுப்பால் ரெடி.
நகரத்தார் குடும்ப மக்கள் இந்த பிள்ளையார் நோம்பு கொண்டாடுவது பழக்கம். குடும்ப நன்மைக்காக கொண்டாடும் இந்த நோன்பு கார்த்திகை தீபம் முடிந்த 21 நாள் பிள்ளையார் நோம்பு கொண்டாடுவது பழக்கம். கண்ணுப்பூ , ஆவாரம்பூ கொண்டு விநாயகரை அலங்கரித்து.
திரட்டுப்பால் அல்லது கருப்பட்டி மாவில் பிள்ளையார் பிடித்து, 21 நூல் திரி (வேஷ்டி நூலில் எடுத்து) தீபம் ஏற்றி அப்படியே சாப்பிடுவது சிறப்பு. உடன் ஆலங்காய் அத்திக்காய், வடை, பணியாரம், சுண்டல், ஐந்து வகை பொரி நெய்வேத்தியமாக படைப்பதுண்டு.

therattupaal
திரட்டுப்பால் செய்யத்தேவையான பொருட்கள்:
பால்-1 லிட்டர்
கருப்பட்டி அல்லது வெல்லம் பொடித்து 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
1.பாலை காய்ச்சி பொங்கி வரும்போது மிதமான தீயில் சுண்டக்காய்ச்சவும்.
2. நான்கில் ஒரு பங்காக சுண்டியதும் பொடித்த வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து பால்கோவா பதம் வரும் வரை கிண்டிக்கொண்டே இருக்கவும்.
3. நன்கு திரண்டு வந்ததும் கிணத்தில் நெய்தடவி, அதில் மாற்றி பயன்படுத்தவும்.
திரட்டுப்பால் ரெடி.

blog-229

செட்டிநாட்டு பலகாரம்

Chettinadcookbook has initiated (online shopping) to sell traditional Chettinad snacks, delicious and healthy products online, fresh from the kitchens of Chettinad region.

Chettinad special Diwali snacks,

Make this Diwali more special, Our Chettinad cookbook is ready to serve Chettinad Snacks for this Diwali from its origin. Fresh from the Kitchens of Chettinad region to your doorstep.

Chettinad snacks are very special all over the world why?
1. They are hygienically prepared with special care.
2. Quality and quantity of the Ingredients used.
3. Oil and ghee, not reused (carefully added when it gets reduced to consume)
4. Method and measurement
5. Delivered, fresh stock, not stored for a long period to maintain the original flavour and aroma.

List of our Chettinad snacks:
1. Thengulal
2. Kai Murukku
3. Uppu Seedai
4. Seeppu Seedai
5. Omappodi

Sweet:
1. Managolam
2. Mavurundai
3. Adhirasam
4. Inippu Seedai

உங்கள் தீபாவளி சிறக்க, எங்கள் செட்டிநாட்டு பலகாரம் செட்டிநாடு பகுதியின் சமையலறைகளில் இருந்து உங்கள் வீட்டு வாசல் வந்தடைய செட்டிநாடு குக்புக் ஏற்பாடு செய்யவுள்ளது.

உலகப்புகழ் பெற்ற செட்டிநாடு பலகாரங்களின் தனிச்சிறப்பு
1. சுகாதாரமாகவும், சிறப்புக் கவனமும் கொண்ட தயாரிப்பு .
2. தரம் மற்றும் பயன்படுத்தப்படும் தேவையான பொருட்களின் அளவு முறை .
3. பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் நெய் .
4. செய்முறை மற்றும் அளவீட்டு முறை.
5. சுவையும் மனமும் குறையாமல் குறிப்பிட்டகாலத்திற்குள் பட்டுவாடா செய்தல்.

எங்கள் செட்டிநாடு பலகாரங்களின் பட்டியல் :
1. தேன்குழல்
2. கை முறுக்கு
3. உப்பு சீடை
4. சீப்பு சீடை
5. ஓமப்பொடி
6. அதிரசம்
7. மணகோலம்
8. மாவுருண்டை
9. இனிப்பு சீடை

How to order our products?

We are ready to serve you through online order to your doorstep.
Step-1 Choose an item from our FB shop picture provided in the Facebook page shop or click the shop now button, message bellow the picture.
Or place your order through Facebook message inbox or through e-mail or FB page (Chettinadcookbook) shop.

Visit our website to order:

Our Online website: http://www.chettinadsnacksonline.com

https://www.facebook.com/chettinadcookbook/shop?cid=1650419258602109

Step 2. Provide your e-mail Id, mobile number and address to deliver your order. along with your order. We will send you the invoice to pay the bill amount.
Step -3. Payment through online via secured pay money online or direct account number will be provided.
Within two to three working days time, your order will be delivered fresh from our kitchen.

For more details contact us on , Mobile Watsapp: 9790256461 / 00601123245509

E-mail : chettinadcookbook@gmail.com

இனிப்பு சீடை / Sweet Seedai

இனிப்பு சீடை:

Krishna jayanthi special Sweet Seedai, for recipe in English please click :  http://wp.me/p1o34t-XO
கிருஷ்ண ஜெயந்தி / கோகுலாஷ்டமி சிறப்பு சீடை. இனிப்பு சீடை வெளிப்பகுதி மொறுமொறுப்பாகவும் உள்பகுதி சிறிது மென்மையானதாகவும், இதமான இனிப்பும், பச்சரிசியின் பால் போன்ற சுவையும் சுவைக்க சுவாரஸ்யமானது.பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை கெடாமல் பயன்படுத்தலாம். குறிப்பிட்டுள்ள முறையை கவனமாக பின்பற்றி பயனடைவீராக.

Sweet Seedai

செய்முறை:
பச்சரிசி மாவு வீட்டில் தயாரித்த பச்சரிசி -1 கோப்பை
வறுத்த உளுந்து மாவு-1 மேஜைக்கரண்டி
வெல்லம் -1/2 கோப்பை பொடித்தவைத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவியது-1 மேஜைக்கரண்டி
எள்ளு-1 தேக்கரண்டி
ஏலப்பொடி -1/4 தேக்கரண்டி
மாவு தயாரிக்க:
பச்சரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு தண்ணீரை சுத்தமாக வடித்துவிடவும், சுத்தமான துணியில் உலர்த்தவும்.
தண்ணீர் முற்றிலும் உலர்ந்ததும், (அரை ஈரப்பதம் ), மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரே மாதிரியான அமைப்புக்கு சல்லடையில் சலித்துக்கொள்ளவும்.
சீடை தயாரிக்க:
அரைத்து சலித்த மாவுடன், அரைத்தமாவில் பொடித்த வெல்லத்தை சேர்த்து (10 நொடி) அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில்உளுந்தமாவு, தேங்காய், எள்ளு மற்றும் ஏலப்பொடி சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.

11998206_951038874937723_283712315_n
பின்னர் சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி பொறிக்க தயாராக வைத்துக்கொள்ளவும்.

11992418_951038871604390_124041166_n
வாணலியில் எண்ணெய் காயவைத்து (கவனம் அதிகம் காயவிடக்கூடாது) மிதமான தீயில் பொன்னிறமாக  பொறித்து எடுக்கவும்.
சுவையான இனிப்பு சீடை தயார்.
குறிப்பு:
1.வெல்லம் சேர்த்து கவனமாக அரைக்கவும், நன்கு கட்டிகள் இல்லாமல் கலவை ஒன்று சேரும் வண்ணம் பிசைந்துகொள்ள வேண்டும்.

மிதமான தீயில் பொரித்தெடுக்க வேண்டும், இல்லையேல் வெல்லம் சேர்த்தமையால் எளிதில் வெளிப்புறம் கருகி விடும் உள்புறம் வேகாமல் இருக்கும்.

கற்கண்டு பாலண்ணம் / கல்கண்டு பொங்கல்- Sugar candy rice

கற்கண்டு பாலண்ணம் / கல்கண்டு பொங்கல் :

Sugar Candy Pongal, Recipe in English please click link:  http://wp.me/p1o34t-u9
மென்மையான, வெண்ணை போன்ற சுவையும், நிறமும் கொண்ட கல்கண்டு சாதம் பெரும்பாலும் கடவுளுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுவது நமது வழக்கம். செட்டிநாட்டு விருந்துகளிலும் இது சிறப்பாக பரிமாறப்படும். குழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த கல்கண்டுபாலண்ணம் அன்றாடம் செய்து கொடுக்கலாம். இதில் பால், பருப்பு, கல்கண்டு, ஏலக்காய், முந்திரி போன்ற சுவையான, மற்றும் சத்து நிறைந்த பொருட்கள் உள்ளடங்கியதால், இது ஆரோக்கியம் நிறைந்த ஒரு முழு உணவாகும்.

 

 கல்கண்டு பொங்கல்- Sugar candy rice
கல்கண்டு பொங்கல்- Sugar candy rice

செய்யத்தேவையான பொருட்கள்:
பச்சரிசி- 1 கோப்பை
கல்கண்டு – 1 கோப்பை (பொடித்தது)
பாசிப்பருப்பு -1/4 கோப்பை ( மலர வேகவைத்தது) விருப்பத்திற்கேற்ப பருப்பு சேர்க்காமலும் செய்யலாம்.
பால் -1 1/2 கோப்பை
தண்ணீர்-1 1/2 கோப்பை
முந்திரி அல்லது பாதாம்-5 அல்லது 9
ஏலக்காய் பொடி -1/2 தேக்கரண்டி
நெய்-2 மேஜைக்கரண்டி
செய்முறை விளக்கம்:
1. பாசிப்பருப்பை 1 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. அரிசியை நன்கு கழுவி, மேலே குறிப்பிட்டுள்ள பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 அல்லது 5 விசில் குக்கரில் வேகவிடவும்.
3. சூடு தணிந்ததும், பொடித்த கல்கண்டு, வேகவைத்த பருப்பு சேர்த்து கலக்கவும், அடிபிடிக்காமல், இளந்தீயில் வைத்து கிளறிவிடவும்.

13936791_1186791528029122_23500583_n
4. நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து கலவையுடன் சேர்க்கவும், ஏலக்காய் பொடி சேர்த்து ஒன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

14081449_1186791461362462_327875057_n

காரட் அல்வா / Carrot Halwa

காரட் அல்வா :
கேசரி செய்வது எவ்வளவு சுலபமோ! அதை விட சுலபமானது இந்த காரட் அல்வா, முக்கிய பொருள் துருவிய காரட் என்பதால், கட்டிகள் உருவாக வாய்ப்பில்லை. இனிப்புத்தன்மை மற்றும் நெய், குறைவாக சேர்ப்பதால் உடல் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டாம். இயற்கையிலேயே நிறம் அதிகமாக காரட்டில் இருப்பதால் செயற்கை வண்ணம் சேர்க்கத்தேவையில்லை. பால், பாதாம், சர்க்கரை துருவிய காரட், சுவை சேர்க்க சிறிது நெய் போன்ற சத்து நிறைந்த பொருட்களின் கலவை இந்த காரட் அல்வா. குழந்தைகள் மிகவும் விரும்பும் ஒரு அற்புதமான இனிப்பு.

காரட் அல்வா / Carrot Halwa
காரட் அல்வா / Carrot Halwa

செய்யத்தேவையான பொருட்கள்:
காரட் – 1/2 கிலோ
சர்க்கரை -1/4 கிலோ
நெய்-2 மேஜைக்கரண்டி
பச்சை கற்பூரம் 1 சிட்டிகை
பாதாம் பருப்பு- 10 லிருந்து 15
பால்-1 கோப்பை
செய்முறை:
பாதாமை ஊறவைத்து பால் விட்டு அரைத்துக்கொள்ளவும். அல்லது தூளாகவும் அரைத்துவைத்துக்கொள்ளலாம்.
காரட்டை துருவி, அரைத்த பாதம் மற்றும்பால் சேர்த்து குக்கரில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் போட்டு நன்கு வேகவைக்கவும்.
பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும், இடையே சிறிது நெய் சேர்க்கவும், நன்கு கெட்டியாக பாத்திரத்தில் ஒட்டாமல், சுருண்டு வரும்போது மீதமுள்ள நெய் சேர்த்து, பச்சை கற்பூரம் சேர்த்து, கிண்டி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான காரட் அல்வா எளிதில் தயார்.

அசோகா அல்வா / Asoka Halwa

அசோகா அல்வா :
மனநிறைவு தரும் அற்புத சுவையுடையது இந்த அசோகா அல்வா, இது திருவையாறு சிறப்பு இனிப்பு வகை.
செய்முறை சுலபமானது. மூலப்பொருள் பாசிப்பருப்பு / பச்சைபருப்பு, சீனி .

13275395_1107725775935698_1579126875_o
செய்யத்தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு-1 கோப்பை
சீனி / சர்க்கரை – 1 1/4 கோப்பை
கோதுமை மாவு -2 மேஜைக்கரண்டி
நெய்-3 மேஜைக்கரண்டி
ஏலக்காய் பொடி -1/4 தேக்கரண்டி
வண்ணப்பொடி – 1 சிட்டிகை

13292922_1108882552486687_356903088_n (1)
செய்முறை:
1.பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து 1 கோப்பை தண்ணீர் விட்டு, மையாக வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
2.வேகவைத்த பாசிப்பருப்பை நன்கு கடைந்து கொள்ளவும்.

13281884_1107725959269013_1394478051_n
3.ஒரு வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
4.அதே வாணலியில் கோதுமை மாவு சேர்த்து நன்கு பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவேண்டும்.

13285636_1107725985935677_1919489289_n
5.பிறகு வேகவைத்து கடைந்துவைத்துள்ள மை போன்ற பாசிப்பருப்பு விழுதை சேர்த்து அத்துடன் நெய், சர்க்கரை மற்றும் வண்ணப்பொடி சேர்த்துக் கிளறவும்.

13293042_1107725939269015_2005329001_n
6.கெட்டியாக வரும் வரை நன்கு கிளறவும், இடையே சிறிது நெய் சேர்த்துக்கொள்ளவும்.

13295315_1107725879269021_876599602_n
அல்வா பாத்திரத்தில் ஒட்டாது திரண்டு வரும் சமயம் மீதமுள்ள நெய், வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான அசோகா அல்வா தயார்.

அசோகா அல்வா / Asoka Halwa
அசோகா அல்வா / Asoka Halwa