பானகம்/Panakam

பானகம் : அகத்திற்கு உகந்த பானம்

சிறப்பறிவோம் செய்து பழகுவோம்:
பானகம், நீர் மோர் போன்ற வெயில் கால குளிர் பானங்கள் தாகம் தீர்ப்பது மட்டுமல்ல நமது உடல் சூட்டை தவிர்த்து நல்ல புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் தரவல்லது வெயிலினால் ஏற்படும் சோர்வைத்தவிர்க்க இவை மிகவும் அருமையான பானம், வயிற்று வலி, நீர் கடுப்பு கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் குறைக்க வல்லது. முக்கியமாக பானக்கம் வெல்லம், சுக்கு, எலுமிச்சை சாறு, சேர்ப்பதால் ருசியும் நன்றாக இருக்கும் , பொதுவாக, கோவில் விசேடங்கள், தேர், திருவிழா சமயங்களில் தண்ணீர் பந்தல் வைத்து விநியோகம் செய்வதுண்டு.
செய்வது சுலபம், கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்களை விட இப்படி கலந்த பருகுவது உடலுக்கும் , மனதிற்கும் பல நன்மைகளை பெறுக்கிடும் என்பது நம் பழக்கத்திலிருந்து கண்டறியப்பட்ட உண்மை. சிறு கவனம் பெரிய நன்மை அருமை புரிந்து நம் சந்ததியினருக்கு உணர்த்துவோம். பானகம் லெமனேடுக்கு மற்றுமோர் பெயர் எனலாம்.


செய்யத்தேவையான பொருட்கள்:
எலுமிச்சை -1 (சாறு எடுத்துக்கொள்ளவும்)
வெல்லம் பொடிதத்து-3 மேஜைக்கரண்டி
சுக்கு தூள்-1/4 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் -1/4 தேக்கரண்டி
தண்ணீர் 2 கோப்பை (400மில்லி )
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடி தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும்,(வெல்லத்தில் சிறிது உப்பு சுவை இருப்பதால் மேலும் நாம் உப்பு சேர்க்கத்தேவையில்லை)

அதில் எலுமிச்சை சாறு, சுக்குத்தூள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும் வடிகட்டத்தேவையில்லை அப்படியே பரிமாறலாம்.
செய்வது சுலபம், கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்களை விட இப்படி கலந்த பருகுவது உடலுக்கு, மனதிற்கும் பல நன்மைகளை பெறுக்கிடும் என்ப நம் பழக்கத்திலிருந்து கண்டறியப்பட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s