சிறுதானிய பொரி உருண்டை:
சிறு தானியம் ஒரு பிரபலமான உணவாக பெருகிவரும் இக்காலத்தில் அதன் பல்வேறு செய்முறைகளும் பகிரக்காண்கிறோம் அந்த வகையில், இது ஒரு வித்யாசமான பயனுள்ள குறிப்பாக இங்கு பதிவிடுகிறேன். சிறு தானியத்தை பொரியாக்கி, பொரியை மாவாக்கி, நெய், சர்க்கரை சேர்த்து உருண்டையாக்கி சத்து நிறைந்த ஒரு தின்பண்டமாக குடும்பத்தோடு சுவைத்து மகிழ்வீர்.
பிள்ளையார் நோம்புக்கு பொரித்த பொரி என்னசெய்வது? வீணாக்காமல் செய்தால் பிரமாதமான சுவையோடு சத்தான பொரி மாவுருண்டை

செய்முறை:
கம்பு -100கிராம்
சோளம் -100கிராம்
அவல் -100கிராம்
தினை -100கிராம்
வரகு -100கிராம்
நெய்-250 அல்லது 300 மில்லி
வெல்லம் / சர்க்கரை -300 கிராம் மாவாக பொடித்துக்கொள்ளவும்
கம்பு, சோளம் தினை,வரகு, அவல் இவற்றை தனித்தனியாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும்,
பொடித்த சர்க்கரையை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
நெய்யை சூடு பண்ணி, கலந்த மாவை சேர்த்து இளம் சூட்டில் கிளறவும்.
கை பொறுக்கும் சூடு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சிறு உருண்டைகளாக உருட்டவும்
சிறுதானிய பொரி உருண்டை தயார்
