வெங்கயக்கோசு / Vengaya kosu :
வெங்கயக்கோசு பிறப்பிடம் செட்டிநாடு இட்லி ,தோசை, ஆப்பம் போன்ற பலகரங்களுக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது . நம் தெனிந்தியாவில் அன்றாட உணவான இட்லி, தோசையோடு தொடங்கும் நட்டகளே அதிகம், தொட்டுக்கொள்ள சுவையான பதார்த்தம் இல்லாவிட்டால் காலை பலகாரம் போர், எனவே வித விதமாய் செய்து அசத்துங்கள்.வெங்கயக்கோசு உடன் அரைக்கப்பட்ட மசாலா சேர்ப்பதால் சுவையோடு மனமும்நிரைந்த அனைவராலும் விரும்பி உணப்படும் ஒரு சைட் டிஷ் என்று சொல்லலாம் .

செய்யத்தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம் -3
தக்காளி -1 பெரியது
உருளைக்கிழங்கு -1 அல்லது மாங்காய் இஞ்சி 50 கிம்
அரைக்க :
மிளகாய் -5 , 7
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி
தேங்காய் -2 அல்லது 3 மேஜைக்கரண்டி
பொட்டுக்கடலை -1 1/2
தக்காளி-1
தாளிக்க:
எண்ணெய் -4 தேக்கரண்டி
சோம்பு -1 தேக்கரண்டி
கருவேப்பிலை-1 கொத்து
உளுந்தம்பருப்பு-1தேக்கரண்டி
செய்முறை
1. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு அல்லது மாங்காய் இஞ்சியை நருக்கிக் கொள்ளவும் .
2. வானலியில் எண்ணெய் காயவைத்து தளிக்கும் பொருட்களைத் போட்டுத்தாளிக்கவும்.
3. கருவேப்பிலை , உருளைக்கிழங்கு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் .
4. 2 நிமிடம் வதக்கியதும் தக்காளியைப் போட்டு வதக்கவும், தக்காளி தோல் விட்டதும் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
5. நன்கு( 10) நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
வேங்கயக்கொசு ரெடி.